Vellore

News December 4, 2024

கொனவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் ஆய்வு

image

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (டிசம்பர் 4) கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்து ஏற்பட்ட இடத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பத்குமார், நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் ஜெயக்குமார், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News December 4, 2024

வேலூர் கோர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலி

image

வேலூர் மாவட்டம் கொணவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தடுப்புச் சுவர் மீது மோதி சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் ஜீப்பில் பயணம் செய்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

News December 4, 2024

வேலூர் மாவட்டத்தில் 14 ஏரிகள் நிரம்பின

image

வங்கக்கடலில் உருவான பெஞ்ஜல் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த மழை 2 நாட்கள் தொடர்ந்து கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் நீர்நிலைகளுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்தது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகளில் 14 ஏரிகள் நிரம்பி உள்ளன. மேலும், 2,075 கனஅடி நீர் பாலாற்றில் செல்வதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News December 3, 2024

காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

image

வேலூர் மாவட்டம்  அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (டிசம்பர் 03.12.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது.ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News December 3, 2024

வேலூர் : பள்ளி மாணவர்களுக்கு திறனறிவு தேர்வு

image

கணித மேதை சீனிவாச இராமானுசன் பிறந்த நாள் முன்னிட்டு 05.01.2025 அன்று வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில், பள்ளி மாணவர்களுக்கான கணித திறனறிவு தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வில் 5,6,7 & 8 பயிலும் மாணவர்கள் பங்கு பெறலாம். இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். தேர்வில் பங்கேற்க பதிவு செய்ய கடைசி நாள் 20.12.2024. மேலும் தகவலுக்கு 0416 2253297 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News December 3, 2024

 பெஞ்சல் புயலால் 46.98 ஹெக்டேர் நெற்பயிர் சேதம்

image

வேலூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. தொடர் மழையால் காட்பாடி, பொன்னை, குடியாத்தம், அணைக்கட்டு உள்ளிட்ட சில பகுதிகளில் 79 விவசாயிகள் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த 4698 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நெற்பயிர்கள் சேதத்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

News December 3, 2024

2 துணை பிடிஓக்களுக்கு பணியிட மாற்றம்; ஆட்சியர் உத்தரவு

image

வேலூர் மாவட்டத்தில் துணை பிடிஓக்கள் 2 பேருக்கு பணியிட மாற்றம் வழங்கி ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி காட்பாடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ கே.வி.குப்பம் துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், வேலூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரிபாய் காட்பாடி துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News December 3, 2024

பள்ளி மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய கலெக்டர்

image

அணைக்கட்டு தாலுகா,அப்புகல் ஊராட்சியை சேர்ந்த ஏரி கொல்லை பள்ளி மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் எங்கள் ஊரில் இருந்து அணைக்கட்டு வரை அரசு பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கலெக்டர் சுப்புலட்சுமி அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் தினமும் காலை 8.15 மணிக்கு வேலூரில் இருந்து அணைக்கட்டு செல்லும் தடம் டி8ஏ பேருந்தை ஏரி கொல்லை வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.

News December 3, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (டிசம்பர் 02.12.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது.ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News December 3, 2024

வேலூர் மாற்றுத்திறனாளிகள் தின விழா: அமைச்சர் பங்கேற்பு

image

காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நாளை (டிசம்பர் 3) நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நிர்வாக துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதில் கலெக்டர், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!