India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசு திறன் மேம்பாட்டு மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரதமரின் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் வருகிற 9-ந் தேதி வேலூர் அப்துல்லாபுரத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. எனவே ஐ.டி.ஐ. 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் நேற்று டிசம்பர் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி முதல்வர் மருந்தகம் அமைக்க வருகிற 10-ந் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் திருகுண ஐயப்பதுரை தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (டிசம்பர் 6) வேலூர் மாவட்டத்தில் எஸ்பி மதிவாணன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலையங்கள், மார்க்கெட், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (டிசம்பர் 05.12.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள், மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
வேலூர்,திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு இடையேயான intercollegiate டேபிள் டென்னிஸ் போட்டி 08.12.24 மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியில் நடைபெறுகிறது. பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவர்கள் மட்டும் இப்போட்டியில் பங்கு பெறலாம். இந்த போட்டி பல்கலைக்கழகத்தின் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெறும்.
வேலூர் மாவட்டம் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் 2-ம் நிலை பெண் காவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி முகாமை காவல் பயிற்சி தலைமையிடத்து எஸ்பி லாவண்யா பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். இதில் காவல் பயிற்சி பள்ளி முதல்வர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
B.Pharm, D.Pharm சான்று பெற்றவர்கள், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (டிச.5) கடைசி நாள் என்பதால், விருப்பமுள்ள தொழில்முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மானியமாக ரூ.3 லட்சம் 2 தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஃபெஞ்சல் புயல் காரணமாக வேலூர்,சென்னை,கள்ளக்குறிச்சி,திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல வட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி தீர்த்தது. அதன் தாக்கம் முடிவதற்குள் நேற்று நள்ளிரவு வேலூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா என்பதை கமென்டில் குறிப்பிடவும்.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (டிசம்பர் 04.12.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாரம்தோறும் புதன்கிழமை நடைபெறும் குறைதீர்வு கூட்டம் இன்று (டிசம்பர் 4) நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதிவாணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளிடம் வழங்கி விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும், இன்று நடந்த முகாமில் 19 மனுக்கள் பெறப்பட்டதாக தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.