Vellore

News February 6, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளம் ரூ.50,000 முதல் – ரூ.1,80,000 வரை வழங்கப்படும். வரும் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். <>ஷேர் செய்யுங்கள்.<<>>

News February 6, 2025

போலீஸ் எனக்கூறி மூதாட்டியிடம் 5 பவுன் செயின் திருட்டு

image

பள்ளிகொண்ட அடுத்த கீழாச்சூர் வாணி தெருவை சேர்ந்தனர் 66 வயது மூதாட்டி லட்சுமி, இவர் நேற்று காலை வங்கிக்கு சென்று கொண்டிருக்கும் போது, அவ்வழியாக வந்த மர்மநபர், இந்த பகுதியில் திருடர்கள் தொல்லை அதிகம் இருப்பதால் நகைகள் அணிந்து செல்லவேண்டாம் என்று கூறி இவரிடம் இருந்த நகையை வாங்கி காகிதத்தில் மடிப்பது போல் பாவனை செய்து திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர்.

News February 5, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. இதில் பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News February 5, 2025

வேலூர் மாவட்ட கலெக்டர் தகவல்

image

வேலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் திட்டத்தின் கீழ் 1 முதல் 19 வயதுக்கு உட்பட்ட மற்றும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) வருகிற பிப்ரவரி 10-ம் தேதி மற்றும் 17-ம் தேதி அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்பட உள்ளது. எனவே முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News February 5, 2025

வேலூர் எஸ்பி தலைமையில் குறைதீர்வு கூட்டம்

image

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமை நடைபெறும் குறைதீர்வு கூட்டம் இன்று (பிப்ரவரி 5) நடந்தது. இந்த குறைதீர்வு கூட்டத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

News February 5, 2025

மத்திய அரசு நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள்

image

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்ஜினியரிங் டிரைய்னி – 150, மேற்பார்வையாளர் டிரைய்னி – 250 என மொத்தம் 400 பணியிடங்கள் உள்ளன. 27 வயது உடைய முதுகலை பட்டம் முடித்தவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 11, 12, 13 தேதிகளில் தேர்வு நடைபெறும். சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். <>ஷேர் பண்ணுங்க.<<>>

News February 5, 2025

சாலை விபத்தில் மேஸ்திரி பலி போலீசார் விசாரணை

image

ஆரணி பகுதியை சேர்ந்தவர் கோகுல்நாத் (30) மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலையில் பைக்கில் சென்றார். அப்போது எதிரே வந்த பைக்கில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் படுகாயமடைந்த கோகுல்நாத்தை, அப்பகுதி மக்கள் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 5, 2025

அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் தயங்காமல் புகாா் அளிக்கலாம்

image

வேலூா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு, அரசு அலுவலகங்களில் கொடுக்கும் மனுக்கள், புகாா்கள் தொடா்பாக அரசு அலுவலா்கள் நேரடியாகவோ, இடைத்தரகா்கள் மூலமாகவோ லஞ்சம் கேட்டால் தயங்காமல் புகாா் தெரிவிக்கலாம். தகவலை நேரிலோ, கைப்பேசி மூலமாகவோ தெரிவிக்கலாம். வேலூா் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலக தொலைபேசி 0416 – 2220893 எண்ணில் புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 4, 2025

வேலூர் மாவட்ட இளைஞர்களுக்கு அறிவிப்பு

image

இந்திய இராணுவ ஆட்சேர்ப்புக்கான முகாம் நாளை (பிப்.05) முதல் 15ஆம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அண்ணா விளையாட்டு திடலில் நடைப்பெற உள்ளது.இதில் வேலூர் மாவட்டத்தை சார்ந்த இளைஞர்கள் இராணுவ ஆட்சேர்ப்புக்கான முகாமில் பங்கு பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (பிப்.04) தெரிவித்துள்ளார்.மேலும் விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக விவரங்களை தெரிந்து கொள்ளலாம்

News February 4, 2025

வேலூர் மாவட்டத்தில் 29 கிராமங்களுக்கு பஸ் வசதி கேட்டு மனு

image

வேலூர் மாவட்டத்தில் பஸ் வசதி இல்லாத கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனு அளிக்கலாம் என கலெக்டர் அறிவித்திருந்தார். அதன்படி, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் ராஜாதோப்பு, சதுப்பேரி, குப்பம், சிங்கல்பாடி, அத்தியூர் உள்ளிட்ட 29 கிராமங்களுக்கு அரசு பஸ்களை இயக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமியிடம் மனு அளித்தனர்.

error: Content is protected !!