India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (டிசம்பர் 20.12.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் இன்று (20.12.2024) பகல் 12 மணி அளவில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு மற்றும் திட்ட குழு தலைவர் மு.பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு இடையேயான intercollegiate Table Tennis போட்டி டிச.24ஆம் தேதி வேலூர், DKM மகளிர் கல்லூரியில் நடைபெறுகிறது. பல்கலை.யின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவிகள் மட்டும் இப்போட்டியில் பங்கு பெறலாம். இந்த போட்டி பல்கலைக்கழகத்தின் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைபெறும்.
வேலூர் கஸ்பாவைச் சேர்ந்தவர் ஜமீர் (29) பெயின்டர். தொரப்பாடியைச் சேர்ந்தவர் ஜூபேர் (27) பேக்கரி ஊழியரும் நண்பர்கள். கடந்த 2022ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி மது போதையில் ஜூபேரின் தலையில் கல்லை வீசி ஜமீர் கொலை செய்தார். இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் ஜமீருக்கு ஆயுள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
வேலுார் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறை மற்றும் பெண்கள் சிறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் (பொறுப்பு) பரசுராமன். இவர் கடலூர் மத்திய சிறைக்கு நேற்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையின் கண்காணிப்பாளராக இருந்த ஆண்டாள் வேலூர் மத்திய சிறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் 10 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய திருமலை அதே அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் அங்கு பணிபுரிந்த கல்பனா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளராகவும், இவர்கள் உள்பட 10 பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம்,கே.வி குப்பம் ஒன்றியம் துருவம் என்ற கிராமத்தில் சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்த சிறுமிக்கு கே.வி குப்பம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை.M.ஜெகன்மூர்த்தி அவர்கள் உயிர் இழந்த சிறுமியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
கே.வி.குப்பம் துருவம் பகுதியில் நேற்று சிறுத்தை தாக்கி பெண் உயிரிழந்தார். அவரது சடலத்துடன் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று தங்களது பகுதிக்கு சாலை வசதி மற்றும் பேருந்து மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சு வார்த்தையடுத்து சுமார் 1 1/2 மணி நேரத்துக்கு பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டு. உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் வேலூர் மாநகராட்சி 3வது மண்டலத்திற்கு உட்பட்ட கன்னிகாபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (19.12.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாணவ, மாணவிகளின் கற்றல் திறன்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் (scrap) உடைக்க தகுதியுள்ள நிலையில் உள்ளது. இவை நாளை (டிசம்பர் 20) வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.