Vellore

News February 10, 2025

பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 424 கோரிக்கை மனுக்கள்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (பிப்.10) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 424 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News February 10, 2025

தங்க பதக்கம் வென்ற வீரர்கள் கலெக்டரிடம் வாழ்த்து

image

உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற 35வது தேசிய விளையாட்டு போட்டிகளில் பளுதூக்கும் போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற வேலூர் வீரர் அஜீத் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற வீராங்கனை லேகா மால்டா, தங்களின் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம் இன்று (பிப்ரவரி 10) காண்பித்து வாழ்த்து பெற்றனர். இதில், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News February 10, 2025

சவுதி அரேபியாவில் மருத்துவர் பணி கலெக்டர் தகவல்

image

சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய விருப்பம் உள்ள அலோபதி டாக்டர்கள் 55 வயதுக்குள் உள்ள 3 ஆண்டுகள் பணி அனுபவம் உடைய முதுகலை பட்டம் பெற்ற அலோபதி ஆண் டாக்டர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். நேர்காணல் வரும் 15-ம் தேதி முதல் பெங்களூரில் நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News February 10, 2025

RRB Group D 2025: சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள்

image

இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் மொத்தம் 32,438 RRB Group D 2025 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். 18- 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000 (அடிப்படை) சம்பளம் வழங்கப்படவுள்ளது. https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் மூலம் பிப். 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News February 10, 2025

வேலூர் ஸ்கூட்டரில் சென்ற முதியவர் பலி

image

வேலூர் விருபாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் (73), இவர் நேற்று தனது ஸ்கூட்டரில் வேலப்பாடி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுந்தரேசன் உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

News February 10, 2025

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (பிப்ரவரி 9) நடத்திய சோதனையில் 11 மது பாட்டில்கள், 200 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.

News February 10, 2025

குழந்தையை சாலையில் வீசி சென்ற பெண்

image

காட்பாடி லத்தேரியை சேர்ந்த தனுஷ் கூலிதொழிலாளி. இவரது மனைவி சினேகா. இந்த தம்பதிக்கு ரித்திகா (2) என்ற மகள் உள்ளார். நேற்று வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே வந்தபோது தனுஷ் மது குடிப்பதற்கு பணம் கேட்டு சினேகாவை அடித்துள்ளார். இதில் விரக்தியடைந்த சினேகா ‘நீயும் வேண்டாம், உன் குழந்தையும் வேண்டாம்’ என குழந்தையை சாலையில் தூக்கி வீசி விட்டு சென்றார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் குழந்தையை மீட்டு விசாரணை.

News February 10, 2025

தேசிய குடற்புழு நீக்க மாத்திரை நாளை விநியோகம்

image

வேலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் திட்டத்தின் கீழ் 1 முதல் 19 வயதுக்கு உட்பட்ட மற்றும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) நாளை பிப்ரவரி 10-ம் தேதி அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படுகிறது. எனவே முகாமினை பயன்படுத்தி கொண்டு குடற்புழு தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ளுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News February 9, 2025

வேலூர்: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

வேலூர் சத்துவாச்சாரி பிராமணர் தெருவில் கடந்த மாதம் நடந்த பொங்கல் விழா தகராறில் வசந்தகுமார் என்பவர் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சிவா, கணேஷ் ஆகியோர் மீது ஏற்கனவே 4 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி மதிவாணன் பரிந்துரையின் பேரில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார்.

News February 9, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (9.02.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்றுமுன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!