Vellore

News January 19, 2025

வேலூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்

image

வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாவட்ட தலைவராக தசரதன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (ஜனவரி 19) வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன் உட்பட மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

News January 19, 2025

வேலூர் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி

image

வேலூர் மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் மாவட்ட அளவில் கூடைப்பந்து லீக் போட்டி பெரியார் பூங்காவில் நடைபெற்றது. சிஎம்சி மருத்துவக்கல்லூரி முதல்வர் சாலமோன் சதீஷ்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக செயல்பட்ட தலா 5 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.

News January 19, 2025

வேலூரில் சிறப்பு பேருந்து இயக்கம்

image

பொங்கல் பண்டிகை முடிந்து பொது மக்கள் ஊர் திரும்புவதற்காக வேலூரில் இருந்து கோயம்பேட்டிற்கு 70 பேருந்து , திருப்பத்தூரில் இருந்து கோயம்பேட்டிற்கு 15 , வேலூரில் இருந்து பெங்களூருக்கு 8, வேலூரில் இருந்து திருச்சிக்கு 5 என மொத்தம் 98 சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகள் இன்றும், நாளையும் பொதுமக்கள் தேவைக்கு ஏற்ப கூடுதலாக  பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

News January 19, 2025

பரோல் முடியும் முன்பே சிறைக்கு திரும்பிய கைதிகள்

image

இந்தாண்டு பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட 35-க்கும் மேற்பட்ட கைதிகள் பரோல் வழங்கக்கோரி விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 21 நன்னடத்தை கைதிகளுக்கு 6 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. கடந்த 14-ந் தேதி கைதிகளில் ஜெயிலில் இருந்து பரோலில் சொந்த ஊருக்கு சென்றனர். இந்த நிலையில் பரோலில் சென்ற 5 கைதிகள் 6 நாட்கள் முடியும் முன்பே சிறைக்கு திரும்பி உள்ளனர்.

News January 18, 2025

வேலூர் மாவட்ட எஸ்பி தகவல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் கடத்துபவர்களை தடுக்கும் விதமாக காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜனவரி 18) நடத்திய சோதனையில் 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் இன்று தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News January 18, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் இன்று (18.01.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர உதவிக்கு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 18, 2025

அதிக ஒலி எழுப்பிய வாகனங்களுக்கு அபராதம்

image

வேலூர் போக்குவரத்து போலீசார் நேற்றிரவு வேலூர் மக்கான் சிக்னல், பழைய மீன்மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் சைலென்சர்களை பொருத்தியிருந்த கார் மற்றும் பைக்குகளை நிறுத்தி அபராதம் விதித்தனர். இந்த சோதனையில் ஒரு கார், 5 பைக் என 6 வாகனங்களுக்கு 22 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

News January 18, 2025

டாஸ்மாக் கடையில் ஒருவருக்கு கத்தி குத்து

image

காட்பாடியைச் சேர்ந்தவர் சாரங்கபாணி. இவரும் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரும் நேற்றிரவு அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது சாரங்கபாணி தன்னிடம் இருந்த கத்தியால் விஜயகுமாரின் வயிற்றில் குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த விஜயகுமாரை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக காட்பாடி போலீசார் சாரங்கபாணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 18, 2025

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளலாம்

image

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 87 ஆயிரத்து 631 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றவர்கள், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் விரைவில் அவற்றை சம்பந்தப்பட்ட ரேஷன்கடைகளில் பெற்று கொள்ளும்படி மாவட்ட வழங்கல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

News January 18, 2025

வேலூரில் புதிய ஏ.டி.எஸ்.பி பொறுப்பேற்பு

image

வேலூர் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பியாக பணியாற்றி வந்த கவுதமன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னையில் பணியிட பயிற்சி மையத்தில் பணியாற்றி வந்த டி.எஸ்.பி ஸ்ரீகாந்த் பதவி உயர்வு பெற்று வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பியாக பொறுப்பு ஏற்று கொண்டார்.

error: Content is protected !!