Vellore

News March 2, 2025

பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு

image

2024-25 கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மார்ச் 3) தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், மாணவர்கள் தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகள், ஐயங்களைத் தெரிவிக்க வசதியாக, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 9498383075, 9498383076 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

News March 2, 2025

மைசூர் ரயிலில் கட்டணம் குறைப்பு

image

சென்னையிலிருந்து மைசூருக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் இன்று முதல் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் வண்டி எண் 16551 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கம் போல் நிறுத்தங்களில் நின்று செல்லும். ஆனால் ரயில் கட்டணம் அரக்கோணத்திலிருந்து காட்பாடிக்கு செல்ல இதற்கு முன்பு ரூ. 55 வசூலிக்கப்பட்டது. இனி 40 ரூபாயாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 2, 2025

வேலூரில் திடீரென பற்றி எறிந்த பேனர்

image

வேலூர், திருமலை திருப்பதி தேவஸ்தானம் அருகில், நேற்று முதல்வர் பிறந்தநாள் என்பதால் அவரை வாழ்த்தி இரும்பு ஷீட்டரில் பேனர் ஒட்டப்பட்டது. இரும்பு ஷாட்டரில் பின்புறம் குப்பைகளை எரித்ததால், இரும்பு ஷேட்டர் சுடேறியது, இதன் காரணமாக ஷேட்டரில் ஓட்டப்பட்ட பேனர் பற்றி எறிந்தது, இதனால் அப்பகுதியில் சிக்னலில் நின்றிருந்த பொது அச்சமடைந்தனர். பின்னர் ஒருவழியாக தீ அணைக்கபட்டது.

News March 2, 2025

வேலூர் மாவட்டத்தில் 15985 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு

image

தமிழ்நாடு முழுவதும் வரும் மார்ச் 3ஆம் தேதி திங்கட்கிழமை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் 141 பள்ளிகளை சேர்ந்த 7,628 மாணவர்கள், 8,357 மாணவிகள் என மொத்தம் 15,985 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக வேலூரில் 80 தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 2, 2025

காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மார்ச் 1-ஆம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News March 1, 2025

குழந்தைகள் நலத்துறையில் வேலைவாய்ப்பு

image

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் இளைஞர் நீதிக் குழுமத்திற்கு உறுப்பினர்கள் நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 பெண் உட்பட 2 சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 35 வயது முதல் 65 வயது வரை இருக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, எண்-300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

News March 1, 2025

ஒடுகத்தூர் அருகே மாடு விடும் விழாவில் 14 பேர் காயம்

image

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பிச்சாநத்தம் கிராமத்தில் நேற்று 106ஆவது ஆண்டு மாடு விடும் திருவிழா நடந்தது. இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து 120க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசு 1லட்சம் என மொத்தம் 65 பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மாடுகள் முட்டியதில் 14 பேர் காயமடைந்தனர்.

News March 1, 2025

வேலூர் வருவாய் கோட்டாட்சியர் திடீர் பணியிட மாற்றம்

image

வேலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியராக கடந்த 7 நாட்களுக்கு முன்பு விஷ்ணுபிரியா நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பொறுப்பேற்ற ஒருவாரத்தில் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதில் கூடலூரில் இருந்து செந்தில்குமார் பணியிட மாற்றம் பெற்று வேலூர் வருவாய் கோட்டாட்சியராக விரைவில் பொறுப்பேற்க உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 1, 2025

ரயிலில் அத்துமீறிய வாலிபர் மீது குண்டாஸ்

image

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்தது. இது தொடர்பான வழக்கில் ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இந்நிலையில் ஹேமராஜ் இன்று (பிப்ரவரி 28) குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 28, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (பிப்ரவரி 28.02.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!