Vellore

News January 21, 2025

பள்ளி மாணவர்கள் மேற்கல்வி பயில பயிற்சி முகாம்

image

வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சார்பாக அரசு மற்றும் அரசு சாரா இல்லங்களில் 9-ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு மேற்கல்வி பயில வழிகாட்டுதல் பயிற்சி முகாமை நாளை (ஜனவரி 21) காலை 11:30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தொடங்கி வைக்க உள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 20, 2025

வேலூர் மாவட்டத்தில் 9 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜனவரி 20) நடத்திய சோதனையில் 9 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இது தொடர்பாக ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் இன்று தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News January 20, 2025

தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

image

வேலூர் மாவட்டம் மேல் மொணவூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகிற ஜனவரி 25ஆம் தேதி (சனிக்கிழமை) தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 40க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்கிறது. 10, 12, ITI, DIPLOMA, DEGREE ஆகிய கல்வித்தகுதி தேர்ச்சி பெற்ற வேலை தேடுபவர்கள் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News January 20, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஜனவரி 20.01.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News January 20, 2025

பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 264 கோரிக்கை மனுக்கள்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (ஜனவரி 20) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 264 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில் குமரன், மாவட்ட வருவாய் மாலதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News January 20, 2025

அறநிலையத்துறை இணை ஆணையர் பொறுப்பேற்பு

image

வேலூர் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராக இருந்த லட்சுமணன் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதுக்கோட்டை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையராக இருந்த அனிதா, வேலூர் இணை ஆணையராக பதவி உயர்வு பெற்று வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் இன்று ( ஜன.20 ) பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அறநிலைய துறை சார்ந்த ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

News January 20, 2025

மாநில அளவிலான கபடி போட்டி அழைப்பிதழ்

image

அணைக்கட்டு அடுத்த சின்ன கோவிந்தம்பாடி கிராமத்தில் தென்றல் கபடி குழு அணியினர் மாநில அளவிலான கபடி போட்டி (பிப் 7,8) தேதி போட்டி நடைபெறும். இதில் முதல் பரிசு ரூ.20,000, இரண்டாம் பரிசு ரூ.15,000,மூன்றாம் பரிசு ரூ.10,000, நான்காம் பரிசு ரூ.5,000, ஐந்தாம் பரிசு ரூ.3,000 உள்ளிட்ட பல பரிசுகள்,கோப்பைகளும் வழங்கப்படுகிறது.இதற்கான ஏற்பாடுகளை தென்றல் கபடி குழுவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

News January 20, 2025

நாட்டு வெடி குண்டு வெடித்து மாட்டின் தாடை கிழிந்தது

image

வேலுார் செம்பேடு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை, இவர் நேற்று மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். அப்போது அந்தபகுதியில் புல்வெளிகளுக்கு இடையே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தும் நாட்டு வெடிகுண்டு மர்மநபர்களால் வைக்கப்பட்டுள்ளது. அதன் மீது மாடு வாய் வைத்த போது திடீரென வெடித்தது. இதில் மாட்டின் தாடை முழுவதுமாக கிழிந்து ரத்தம் கொட்டியது. இதுகுறித்து அரியூர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

News January 19, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (19.01.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்றுமுன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News January 19, 2025

வேலூர் மாவட்ட பாஜக புதிய தலைவர் பொறுப்பேற்பு

image

வேலூர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி புதிய மாவட்ட தலைவராக தசரதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயணி முன்னிலையில் இன்று (ஜனவரி 19) பொறுப்பேற்றுக்கொண்டார். மாநிலத்தின் வழிகாட்டுதலின்படி தரவு மேலாண்மை பிரிவின் காணொளி காட்சி வாயிலாக உறுதிமொழி ஏற்று புதிய மாவட்ட தலைவராக பொறுப்பேற்றார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!