Vellore

News February 13, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (பிப்ரவரி 13.02.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News February 13, 2025

ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலி

image

வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மாரி மகன் சஞ்ஜய் (13). இவர் இன்று மாங்காய் மண்டியில் இருந்து குடியாத்தத்திற்கு பழ லோடுகளை ஏற்றி சென்ற அசோக் என்பவரின் ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது அப்துல்லாபுரம் அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த சிறுவன் சஞ்சய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்‌. இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 13, 2025

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

image

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று கொணவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது புறயோளிகள் பிரிவு, கட்டு போடும் அறை, ஊசிபோடும் அறை, கருப்பைவாய் பரிசோதனை அறை, நெபுலைசர் அறை, பதிவு செய்யும் அறை, மருந்தகம் ஆகிய இடங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களிடம் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

News February 13, 2025

குரங்கை வேட்டையாடிய சிறுத்தை 

image

குடியாத்தம் சாமியார் மலை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் நேற்று குரங்குகள் கூச்சலிட்டவாரு இருந்துள்ளது. உடனே அங்கு சென்று பார்த்தபோது   சிறுத்தை ஒன்று, குரங்கை வேட்டையாடி சென்றது தெரிந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வனச்சரகத்தில் உள்ள காப்புக் காடுகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. உடனே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்து உள்ளது.  

News February 13, 2025

கேசவபுரம் கிராமத்தில் மாபெரும் காளை விடும் திருவிழா

image

வேலூர் அடுத்த கேசவபுரம் கிராமத்தில் நடத்தும் 40-ஆம் ஆண்டு மாபெரும் காளை விடும் திருவிழா (பிப்.15) நடைபெற உள்ளது.இதில், வேகமாக ஓடி இலக்கை எட்டும் காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.1,00,000,இரண்டாம் பரிசு ரூ.75,000,மூன்றாம் பரிசு ரூ.55,001,நான்காம் பரிசு ரூ.45,000,ஐந்தாம் பரிசு ரூ.35,000 என 60 பரிசுகள் வழங்கப்பட உள்ளன.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

News February 13, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <> லிங்கை க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்க வேண்டும்.

News February 13, 2025

கே.வி.குப்பம் அருகே மாடுகள் முட்டியதில் 8 பேர் காயம்

image

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா, நாகல் கிராமத்தில் மாடு விடும் திருவிழா நேற்று நடந்தது. இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மற்றும் ஆந்திராவில் இருந்து என மொத்தம் 167 மாடுகள் பங்கேற்றது. பின்னர் வாடிவாசலில் இருந்து மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடியது. அப்போது மாடுகள் முட்டியதில் 8 பேர் காயம் அடைந்தனர்.

News February 13, 2025

தம்பியை கத்தியால் குத்திய அண்ணன்

image

வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் இமாச்சார். இவரது மகன்கள் பிரேம்குமார் (32), அஜித்குமார் (29). மதுபோதையில் இருந்த அண்ணன் பிரேம்குமார், தனது தம்பி அஜித்குமாரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த அஜித்குமாரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News February 12, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (பிப்ரவரி 12.02.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News February 12, 2025

ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட பெண்ணுக்கு நிவாரண நிதி

image

கே.வி குப்பம் அருகே ரயிலிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு, ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணுக்கு ரூ.3 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (பிப்ரவரி 12) பெண்ணின் குடும்பத்தாரிடம் வழங்கினார். இதில் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!