India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காட்பாடி வெங்கடேசபுரம் பகுதியில் காட்பாடி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் கர்நாடக மாநிலத்தை ராஜேஷ்(23) என்பதும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சத்யா என்பவரது வீட்டில் ஆறு சவரன் தங்க நகைகள் திருடிய அவர், மீண்டும் அதே வீட்டில் கைவரிசை காட்ட வந்து போலீசிடம் சிக்கிக் கொண்டார்.
இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய, மாநில, பல்கலை., அளவிலான போட்டிகளில் 3ஆவது இடமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். <
AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
வேலூர் வள்ளலார் பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சத்துவாச்சாரி போலீசார் அப்பகுதியில் உள்ள விடுதிகளில் நேற்று முன்தினம் (மார்.29) சோதனை நடத்தினர். அப்போது, ஒரு விடுதியில் வடமாநில பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது. பாலியல் தொழில் நடத்தி வந்த சர்தார் (50) என்பவரை போலீசார் கைது செய்து, அப்பெண்ணை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 391 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ முடித்திருந்தால் போதும். இதற்கு 18- 30 வயதுடையவர்கள் ஏப்ரல்- 1ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.39,015 முதல் ரூ.68,697 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் ‘சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்’ என்ற 3 நாள் பயிற்சியை நடத்த உள்ளது. வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18+ வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். <
பென்னாத்தூர் அடுத்த கேசவபுரம் கிராமத்தில், நேற்று (மார்.29) எருது விடும் விழா கோலாகலமாக நடந்தது. 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்ட காளைகள், மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து ஓடின. இலக்கை குறைந்த வேகத்தில் கடந்த காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. காளை விடும் விழாவில், மாடுகள் முட்டியதில் 15 பேருக்கு காயம் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த 27ஆம் தேதியில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நேற்றும் வெப்பம் சுட்டெரித்ததை பார்க்க முடிந்தது. அதன்படி, மதுரை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது. வேலூரில் 103.46 டிகிரி (39.7 செல்சியஸ்) வெயில் பதிவானதால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். ஷேர் செய்யுங்கள்
வேலூரில் இன்று வெயில் சதமடித்துள்ளது(103.5). இந்நிலையில், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க, 1. 2 மணி நேரத்துக்கு ஒரு டம்ளர் வீதம் (250 மி.லி) நாளொன்றுக்கு 10- 12 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். 2. எளிதில் செரிமானமாகும் உணவுகளை சாப்பிடுங்கள். 3. மது, புகைபிடிப்பதை தவிர்க்கவும். 4. நீர் சத்து நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும். 5. வெளியே செல்லும் போது குடை எடுத்து செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க.
வேலூர் அருகே வாலாஜா பகுதியில் உள்ள வன்னிவேடு கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள சனிஸ்வர பகவான் ஒற்றைக் காலில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். ஒவ்வொரு சனிக்கிழமைகளில் சனிஸ்வரருக்கு 17 பாகற்காய்களை மாலையாகத் தொத்து அணிந்து எள் தீபமேற்றி வழிபடலாம். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இன்று இரவு 11.01 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.