India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (பிப்ரவரி 21.02.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள், மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
ஒடுகத்தூர் அடுத்த ஆண்டிக்கொட்டாய் கிராமத்தில் மாடு விடும் திருவிழா நேற்று நடந்தது. இதில், 200 மாடுகள் கலந்து கொண்டன. குறைந்த நேரத்தில் இலக்கை அடையும் மாடுகளுக்கு முதல் பரிசாக 60 ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட 73 பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மாடுகள் முட்டியதில் 13 பேர் காயம் அடைந்தனர். ஓடுபாதையில் விழுந்ததில் 5 மாடுகள் காயம் அடைந்தது. கால்நடை மருத்துவர்கள் மாடுகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
வேலூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், பாதாள கழிவு நீர் கட்டணம், கடை வாடகை மற்றும் தொழில் வரி இனங்களை மக்கள் செலுத்த வசதியாக மார்ச்.31 ஆம் தேதி வரை மாநகராட்சி கணிணி வரி வசூல் மையங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை செயல்படும் எனத் தெரிவித்துள்ளனர். இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி அனைத்து வரியினங்களையும் செலுத்துமாறு வேலூர் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (பிப்ரவரி 20.02.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்..
வேலூரில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. தற்போது 34 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. இன்று அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. காற்றின் ஈரப்பதம் காரணமாக, 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உணரப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வரும் பிப்ரவரி 28 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் ரிவேரா -2025 கலைத் திருவிழாவின் முதல் நாளான இன்று (பிப்ரவரி 20) கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டியை இந்திய பெண்கள் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் அனிதா பால்துரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பல்கலைக்கழக துணை தலைவர் சங்கர் விஸ்வநாதன், துணை வேந்தர் காஞ்சனா பாஸ்கரன், மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோவையில் இருந்து சென்னை சென்டரல் செல்லும் கோவை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு 8.30 மணியளவில் காட்பாடி ரயில் நிலையத்தின் 2வது பிளாட்பார்த்திற்கு வந்தது. அப்போது ரயிலில் ஏற முயன்ற 75 வயதுடைய முதியவர் ரயிலின் பிளாட்பார்மிற்கு இடையில் சிக்கிக்கொண்டு பரிதாபமாக இறந்தார். இது குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜாபர் ஷெரீப் (35) ஆட்டோ டிரைவர் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று ஜாபர் ஷெரீப்புக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (பிப்ரவரி 19) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியாகியுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும்போலீசாரின் தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க அந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.