Vellore

News April 7, 2025

வேலூரில் கொளுத்தி எடுக்கும் வெயில்

image

தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று (ஏப்ரல் 6) வெயில் வாட்டி வதைத்தது. 6 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்தது. அதிகபட்சமாக வேலூரில் 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. கரூர் பரமத்தி, சேலம், ஈரோட்டில் 101 டிகிரி வெப்பம் நிலவியது. தினமும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறையாமல் வெயில் பதிவாவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் வீட்டை விட்டு வெளியேவரவே பொதுமக்கள் தயங்குகின்றனர்.

News April 7, 2025

வேலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், காவல் துறை சார்பில் (06.04.2025) இன்று இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரோந்து 1 முதல் 5 வரை மொத்தமாக 5 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் ஓர் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பொறுப்பாக உள்ளனர்.

News April 6, 2025

வேலூர்: முன் ஜென்ம பாவங்கள் நீங்க செல்ல வேண்டிய கோவில்

image

வேலூர் விண்ணம்பள்ளி பழமையான அகத்தீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் மீது சூரியஒளி விழும் நிகழ்வு பங்குனி மாதம் 23ம் தேதி முதல் சித்திரை 1 வரை நடைபெறும். இந்த ஆண்டும் வரும் ஏப். 14-ஆம் தேதி வரை இந்நிகழ்வு நடைபெற உள்ளது. சிவனை சூரியன் வழிபடும் காட்சியை கண்டால் முன்ஜெனம பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. அதனாலேயே ஏராளமான பகதர்கள் வருகை தந்து வழிபட்டு செல்கின்றனர். ஷேர் பண்ணுங்க 

News April 6, 2025

வேலூரில் தமிழில் பெயர் வைக்க ஆட்சியர் உத்தரவு

image

வேலூர்ஆட்சியர் அறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “மாவட்டத்தில் உள்ள கடைகள், ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள், அனைத்து வகையான தொழிற்சாலைகள் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் வருகிற மே 15-ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்; தமிழ், ஆங்கிலம் மற்றும் தேவைபட்டால் பிற மொழிகளிலும் எழுதி கொள்ளாலாம்” என குறிப்பிட்டுள்ளார். *உங்களுக்கு தெரிந்த கடை வைத்திருப்போர்& தமிழ் ஆர்வலர்களுக்கு பகிரவும்*

News April 6, 2025

9 இடங்களில் மாடு விடும் விழா நடத்த அனுமதி

image

வேலூர் மாவட்டத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் 9 இடங்களில் மாடுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 7ஆம் தேதி பள்ளிகொண்டா, 11ஆம் தேதி காட்பாடி, செதுவாலை, 12ஆம் தேதி வடுகன்தாங்கல், 16ஆம் தேதி ராமாபுரம், 17ஆம் தேதி காட்பாடி, 19ஆம் தேதி அக்ராவரம் 19ஆம் தேதி மோட்டூர், மே 2ஆம் தேதி கழிஞ்சூர் ஆகிய இடங்களில் மாடுவிடும் விழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

News April 6, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து வரும் மே மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்.

News April 6, 2025

போட்டோகிராபர் மயங்கி விழுந்து பலி

image

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (57). போட்டோகிராபரான இவர், வேலுார் தென்னைமர தெருவில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 4) நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 6, 2025

வேலூரில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில்

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 5) 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், கடந்த சில நாட்களாக தினமும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வேலூரில் வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டே வெளியே வர தயங்குகின்றனர். உங்க ஏரியாவில் வெயில் எப்படி?

News April 5, 2025

வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு

image

வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் (CMC) பல்வேறு பதவிகளுக்கு 10 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு ரூ.30,643 வரை சம்பளம் கிடைக்கும். இதற்கு, 10th, Any Degree, B.Sc, BVSc, D.Pharm, M.Sc, MA, MD, MS, MSW, PG Diploma போன்ற படிப்புகளை படித்தவர்கள் https://www.cmch-vellore.edu/about-us/ என்ற தளத்தில் ஏப்ரல் 7-க்குள் விண்ணப்பிக்கலாம். *செம்ம வாய்ப்பு, நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்க

News April 5, 2025

வேலூர் மக்களுக்கு மின்சார அதிகாரிகள் எச்சரிக்கை

image

வேலூா் காகிதப்பட்டறை, சேண்பாக்கம் பகுதியில் மின் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த பசுமாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன. இதையடுத்து, ‘மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம். மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்’ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். *இது போன்ற முக்கிய அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்றுங்கள். நண்பர்களையும் உஷார் படுத்துங்கள்*

error: Content is protected !!