Vellore

News February 28, 2025

கே.வி.குப்பம் ஏடிஎம் கதவு உடைப்பு: போலீசார் விசாரணை

image

காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் காவல் நிலையம் எதிரில் தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் உள்ள கண்ணாடி கதவுகள் நேற்று மர்மமான முறையில் உடைந்து சிதறி கிடந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கே.வி.குப்பம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 28, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (பிப்ரவரி 27.02.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News February 27, 2025

வேலூர் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் 36 புதிய மினி பேருந்து வழித்தடங்கள் கண்டறியப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க விரும்புவோர் வருகிற மார்ச் 7-ம் தேதிக்குள் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (பிப்ரவரி 27) தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News February 27, 2025

10’வது முடித்தால் போதும்; வேலூரிலேயே வேலை வாய்ப்பு

image

வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகிற பிப்ரவரி 28-ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (பிப்ரவரி 25) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதில் 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கிறது.

News February 27, 2025

தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ்

image

வேலூரில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வருபவர் சரண்யா இவரது கணவர் சென்னையில் போலீசாக உள்ளார்‌. தனது பெண் குழந்தையின் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு செல்ல விடுமுறை கேட்டுள்ளார். விடுமுறை கிடைக்காததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த சரண்யா நேற்று  தற்கொலைக்கு முயன்றுள்ளார்‌. இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

News February 27, 2025

மயான கொள்ளை திருவிழாவுக்கு 600 போலீசார் பாதுகாப்பு

image

மயான கொள்ளை திருவிழாவையொட்டி இன்று (பிப். 27) வேலூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 5 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 600 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அடையாளம் காணப்பட்ட நபர்களை அழைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. மதிவாணன் தெரிவித்துள்ளார்.

News February 26, 2025

வேலூரில் பூண்டு விலை சரிவு

image

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் கடந்த மாதம் வரத்து குறைவு காரணமாக ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்ட பூண்டு, தற்போது விளைச்சல் அதிகரிப்பால் வரத்து அதிகமாகி விலை குறைந்து வருகிறது. அதன்படி, இன்று வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் ஒரு கிலோ பூண்டு ரூ.40 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

News February 26, 2025

விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தகவல்

image

வேலூர் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வரும் (பிப்ரவரி 28) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 26, 2025

புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

image

அணைக்கட்டு தாலுக்கா வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் புனிதா தலைமையிலான போலீசார் நேற்று கரடிகுடி பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அங்கு பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த ஷாஜகான் என்பவர் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 35.745 கிலோ கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, ஷாஜகானை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 26, 2025

காட்பாடி அருகே 45 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விருதம்பட்டு பகுதியில் விருதம்பட்டு போலீசார் இன்று (பிப்ரவரி 25) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 45 கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து பைக் ஓட்டி வந்த வடிவேல் (40) என்பவரை கைது செய்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!