Vellore

News April 6, 2024

வேலூர் நடிகர் மன்சூர் அலிகான் வாக்கு சேகரிப்பு

image

மக்களவை தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் இன்று (ஏப்ரல் 6) வேலூர் நேதாஜி மார்க்கெட், லாங்குபஜார், மண்டி தெரு, கிருபானந்த வாரியார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்று பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

News April 6, 2024

வேலூர்: பதற்றமான சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

வேலூர் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 246 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், மிகவும் பதற்றமானது இல்லை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

வேலூர்: தபால் வாக்குகள் பெறும் தேதி அறிவிப்பு

image

மக்களவைத் தேர்தல் முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி வேலூர் தொகுதியில் மொத்தம் 2785 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களிடம் தபால் வாக்குகளை பெறும் பணி ஏப்ரல் 8ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி நேற்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

வேலூர்: 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்த நபர்

image

அணைக்கட்டு அடுத்த ராஜபுரத்தை சேர்ந்த மணி (26) என்பவர் நேற்று தனது கிராமத்தில் உள்ள சுமார் 100 அடி ஆழம் கொண்ட பொது கிணற்றை சுத்தம் செய்ய இறங்கியபோது கையில் காயம் ஏற்பட்டது. பின்பு அவரால் மேலே வர முடியவில்லை. அவருடைய அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள் அவரை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் .

News April 5, 2024

வேலூர் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

image

மக்களவைத் தேர்தல் முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த துணை ராணுவ படையினர் இன்று (ஏப்ரல்.5) வேலூர் சைதாப்பேட்டை ஆற்காடு சாலையில் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த அணி வகுப்பு ஊர்வலத்தை டிஎஸ்பி திருநாவுக்கரசு துவக்கி வைத்தார். இதில் 200க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் கலந்து கொண்டனர்.

News April 5, 2024

வேலூர் கோட்டை மைதானத்தில் பூமி பூஜை

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 10ஆம்தேதி வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற உள்ள பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதையொட்டி இன்று (ஏப்ரல் 5) கோட்டை மைதானத்தில் பந்தல் அமைக்க பூமி பூஜையை எம்பி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தொடங்கி வைத்தார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News April 5, 2024

வேலூர் முழுவதும் ஒரேநாளில் 9 வழக்கு பதிவு

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (ஏப்ரல் 4) நடத்திய சோதனையில் கள்ளச்சாராயம் 60 லிட்டர், 77 மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து 9 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.

News April 4, 2024

தேர்தலை புறக்கணிக்க போவதாக ஆர்ப்பாட்டம்

image

காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த பாலேங்குப்பம் பஞ்சாயத்து கோடவார்பள்ளி காலனி பகுதியில் 75க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்குள்ள சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி இல்லை எனவே எங்களுக்கு சுடுகாட்டிற்கு தனி பாதை அமைத்து தரக்கோரி இன்று (ஏப்ரல் 4) கருப்பு கொடி ஏந்தி மக்களவை தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News April 4, 2024

இருசக்கர வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு

image

வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் செல்வி (69). இவர் நேற்றிரவு ஓடை பிள்ளையார் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பைக் செல்வி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார். பின்னர் அங்கு இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!