India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும். இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 23) ஒரே நாளில் ரூ.80 லட்சத்திற்கும் அதிகமாக வர்த்தகம் நடந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் (ஏப்.19) முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள எல்லையோர மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதன்படி வேலூர் மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 22) வெயில் அளவு 106.7°F ஆக பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க வெளியில் செல்லும்போது குடை, தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை கொண்டுசெல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்ததற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு வேலூர் மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் நேற்று (ஏப்ரல் 22) சென்னையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஏப்ரல் 22) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 23 மதுபாட்டில்கள், 5 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 5 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
சித்ரா பவுர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக வேலூர் மாவட்டத்திலிருந்து ஏடிஎஸ்பிக்கள் கோட்டீஸ்வரன், கவுதமன் தலைமையில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 200 போலீசார் இன்று (ஏப்ரல் 22) வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்று உள்ளனர் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
குடியாத்தம் ஒன்றியம், சீவூர் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் குடியாத்தம்-பலமனேரி சாலையை மறித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த தீடீர் போராட்டத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் டவுன், தனியார் புதிய கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து புதிய கடை திறந்து வைத்தார். இதில் குடியாத்தம் நகராட்சி மன்ற தலைவர் சௌந்தர் ராஜன் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் சத்யானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு முதலே சென்னைக்கு மக்கள் அதிக அளவு சென்று கொண்டிருக்கின்றனர். குறிப்பாக இன்று (ஏப்ரல் 22) காலை 10.30 மணியளவிலிருந்து வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சென்னைக்கு செல்ல மக்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே உள்ளது. தொடர்ந்து அரசு போக்குவரத்து கழகம் தேவைக்கேற்றவாறு பேருந்துகளை அதிகப்படுத்தி இயக்கி வருகின்றனர்.
குடியாத்தம் வள்ளலார் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவர் 9ம் வகுப்பு படித்து வந்தார். தேர்தல் அன்று அவரது தாயார் ஓட்டுப்போடுவதற்காக சென்றிருந்தார். வீட்டில் மாணவர் மட்டும் தனியாக இருந்தார். தாயார் ஓட்டுப்போட்டு விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் மாணவரை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
மேலும் குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.