India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் இன்று (மே 2) அதிகபட்ச வெயிலாக 110.5°F வெயில் பதிவானது. பகல் நேரத்தில் பொதுமக்கள் முதியவர்கள் கர்ப்பிணி பெண்கள் வெளியில் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாலை வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் குளிர்ந்த காற்று வீசியது. இதையடுத்து பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
வேலூர் ஓல்டுடவுன் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (64). இவர் நேற்று கீழ்மொணவூரில் நடந்த உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் கீழ்மொணவூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் திடீரென முருகேசன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கே.வி. குப்பம் தொகுதிக்குட்பட்ட சேத்துவண்டை பகுதியில் மோனிஷ் என்பவருக்கு சொந்தமான மூன்று ஆடுகளை இன்று மர்ம விலங்கு கடித்து கழுத்து மற்றும் உடல் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. மேலும் இதுகுறித்து குடியாத்தம் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்திற்கு இன்று (மே.02) மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் ஆங்காங்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட்-உம் முதன்முதலாக விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ புரம் என்றழைக்கப்படும் ஸ்ரீ லஷ்மி நாராயணி கோவில் வேலூர், திருமலைகோடி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில், 1500 கிலோகிராம் சுத்த தங்கத்தைப் பயன்படுத்தி செய்த தங்கத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இது அமிர்தசரசில் இருக்கும் பொற்கோயிலின் உட்புற விமானத்தின் அளவை விட இரட்டிப்பாக உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில் நட்சத்திர வடிவம் போல் கோயில் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ புரம் என்றழைக்கப்படும் ஸ்ரீ லஷ்மி நாராயணி கோவில் வேலூர், திருமலைகோடி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில், 1500 கிலோகிராம் சுத்த தங்கத்தைப் பயன்படுத்தி செய்த தங்கத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இது அமிர்தசரசில் இருக்கும் பொற்கோயிலின் உட்புற விமானத்தின் அளவை விட இரட்டிப்பாக உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில் நட்சத்திர வடிவம் போல் கோயில் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களின் ஊரகப் பகுதிகளில் கோடை காலங்களில் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வு கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே 2) நடந்தது. இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு எர்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் உலகநாதன். இவருக்கு சொந்தமான மாந்தோப்பில் நேற்றிரவு (மே 1) புகுந்த 3 காட்டு யானைகள் மா மரங்களின் கிளைகளை முறித்து சேதப்படுத்தின. இதையடுத்து உலகநாதன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்து காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
வேலூர் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் வழங்கப்படும் கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (மே1) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நித்தியானந்தம் உட்பட பலர் உடனிருந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே 1) தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று மாலை 7 மணி வரை வேலூரில், இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதால், வெயிலின் தாக்கம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியும், வழுக்கலான ரோடுகளாகவும் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.