Vellore

News May 2, 2024

வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

வேலூர் மாவட்டத்திற்கு இன்று (மே.02) மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் ஆங்காங்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட்-உம் முதன்முதலாக விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 2, 2024

வேலூரில் ஜொலிக்கும் பொற்கோவில் சிறப்புகள்!

image

ஸ்ரீ புரம் என்றழைக்கப்படும் ஸ்ரீ லஷ்மி நாராயணி கோவில் வேலூர், திருமலைகோடி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில், 1500 கிலோகிராம் சுத்த தங்கத்தைப் பயன்படுத்தி செய்த தங்கத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இது அமிர்தசரசில் இருக்கும் பொற்கோயிலின் உட்புற விமானத்தின் அளவை விட இரட்டிப்பாக உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில் நட்சத்திர வடிவம் போல் கோயில் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

News May 2, 2024

வேலூரில் ஜொலிக்கும் பொற்கோவில் சிறப்புகள்!

image

ஸ்ரீ புரம் என்றழைக்கப்படும் ஸ்ரீ லஷ்மி நாராயணி கோவில் வேலூர், திருமலைகோடி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில், 1500 கிலோகிராம் சுத்த தங்கத்தைப் பயன்படுத்தி செய்த தங்கத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இது அமிர்தசரசில் இருக்கும் பொற்கோயிலின் உட்புற விமானத்தின் அளவை விட இரட்டிப்பாக உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில் நட்சத்திர வடிவம் போல் கோயில் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

News May 2, 2024

குடிநீர் விநியோகம் குறித்து வேலூர் கலெக்டர் ஆலோசனை

image

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களின் ஊரகப் பகுதிகளில் கோடை காலங்களில் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வு கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே 2) நடந்தது. இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

News May 2, 2024

மாந்தோப்பை சேதப்படுத்திய காட்டு யானைகள்

image

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு எர்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் உலகநாதன். இவருக்கு சொந்தமான மாந்தோப்பில் நேற்றிரவு (மே 1) புகுந்த 3 காட்டு யானைகள் மா மரங்களின் கிளைகளை முறித்து  சேதப்படுத்தின. இதையடுத்து  உலகநாதன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்து காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

News May 1, 2024

குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

image

வேலூர் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் வழங்கப்படும் கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (மே1) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நித்தியானந்தம் உட்பட பலர் உடனிருந்தனர்.

News May 1, 2024

வேலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

வேலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே 1) தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று மாலை 7 மணி வரை வேலூரில், இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதால், வெயிலின் தாக்கம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியும், வழுக்கலான ரோடுகளாகவும் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

வேலூர் எம்பி வேட்பாளர் தொழிலாளர் தின வாழ்த்து

image

மக்களவைத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும், புதிய நீதி கட்சியின் நிறுவன தலைவருமான ஏ.சி.சண்முகம் இன்று (மே 1) உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு உடலால் உழைப்பை உருவாக்கி உழைப்பால் இவ்வுலகை இயக்கிக் கொண்டிருக்கும் உழைப்பாளர்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

News May 1, 2024

பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

image

வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் ‘எந்திரனியல் பயிற்சி பட்டறை’ 6ஆம் வகுப்பு முதல் பிளஸ்-1 மாணவர்களுக்கு மே 14, 15 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி பட்டறையில் இவி-3 ரோபாட்டின் பாகங்களை தொகுத்து வடிவமைத்து செயல் முறைபடுத்த பயிற்சி அளிக்கப்படும். பங்குபெற விரும்பும் பள்ளி மாணவர்கள் நேரில் முன்பதிவு செய்யவேண்டும். என மாவட்ட அறிவியல் அலுவலர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

News May 1, 2024

வேலூரில் அக்னிபாத் திட்டம் எழுத்துத்தேர்வு

image

நாடு முழுவதும் அக்னி பாத் திட்டத்தில் ராணுவத்தில் அக்னி வீரர்களாக சேருவதற்கான எழுத்துத்தேர்வு ஆன்லைனில் நடைபெற்றது. வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் நேற்று (ஏப்ரல் 30) நடந்த தேர்வில் 400 பேர் கலந்து கொண்டனர். தேர்வு அறைக்குள் செல்வதற்கு முன்பு தேர்வாளர்கள் பலத்த சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர். மின்னணு சாதன பொருட்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.

error: Content is protected !!