India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி இன்று (மே 16) ஓட்டேரியில் உள்ள கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மாநகராட்சி உதவி ஆணையர் சதகத்துல்லா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர் நித்தியானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூரில் கடுமையான வெயில் நிலவிவந்த நிலையில் மழை வந்து தணித்து வருகிறது. அந்த வகையில் நேற்று (மே 15) வேலூர் மாவட்டம் குடியாத்தம் மோர்தானா பகுதியில் அதிகபட்சமாக 9 மிமீ மழை பதிவானது. ஒடுகத்தூரில் 6 மிமீ மழையும், மேல் ஆலத்தூர் 7.20 மிமீ மழையும், பேரணாம்பட்டு 8 மிமீ, கே.வி.குப்பம் 1.20 மிமீ, மாவட்டம் முழுவதுமாக 33.30 மிமீ மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
குடியாத்தம் தரணம்பேட்டை பஜாரில் கடந்த மாதம் தூங்கிக் கொண்டிருந்த சின்னக்குழந்தை (75) என்பவர் தலையின் மீது தரணி என்பவர் கல்லை போட்டு கொலை செய்து விட்டு ஓடிவிட்டார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து தரணியை நேற்று கைது செய்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி நேற்று (மே 15) தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் முரளிதரன் தலைமையிலான போலீசார் இன்று (மே 15) காட்பாடி தாராபடவேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள ஏரிக்கரை பகுதியில் 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குமார் சிங், தாரத் ராஜாத் என்பதும் பையில் 6 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று (மே 15) 101.7°F வெயில் பதிவானது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்து வருகின்றனர். முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், வேலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவிகளை பாராட்டி நினைவு பரிசினை கலெக்டர் சுப்புலட்சுமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வியில் வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, இன்று விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் மாலதி மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் மாணவா்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு ரோபோடிக்ஸ் பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கி, 2 நாள்கள் நடைபெறுகிறது. இதில், வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 6 முதல் 1ஆம் வகுப்பு பயிலும் 24 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.
கே.வி.குப்பத்தை அடுத்த லத்தேரியைச் சேர்ந்த துரைராஜ் என்பவரது குழந்தை சுஷ்மிதா (1). நேற்று (மே 14) குழந்தை சுஷ்மிதா விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
Sorry, no posts matched your criteria.