Vellore

News May 20, 2024

வேலூர் : இருசக்கர வாகனம் விபத்து – 2 பேர் படுகாயம்

image

வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இன்று ( மே 20 ) லோடு ஆட்டோ மீது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 20, 2024

ஸ்ரீபுரம் பொற்கோயிலில் 1008 தீபம் ஏற்றி வழிபாடு

image

வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ சீனிவாசன் பெருமாள் கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு நேற்றிரவு (மே 20) ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் 1008 பாரம்பரிய நெய் தீபம் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ சீனிவாச பெருமாளை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

News May 20, 2024

பயணியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது

image

காட்பாடியை சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவர் நேற்று வேலூர் பழைய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அங்கு வந்த வேலூரை சேர்ந்த உதயா, வசந்தபுரத்தைச் சேர்ந்த சூர்யா ஆகியோர் திடீரென சந்திரசேகரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அவர் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் உதயா, சூர்யா ஆகிய இருரை கைதுசெய்தனர்.

News May 20, 2024

வேலூர்: பயணிகளிடம் 33 சவரன் நகை திருடிய பெண்..!

image

வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் தொடர்ந்து பயணிகளிடம் நகை, பணம் திருடிவந்த ஆந்திர மாநிலம் சித்திரையை சேர்ந்த பாரதி என்ற இளம்பெண்ணை வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் நேற்று (மே 19) சிசிடிவி கேமரா உதவியுடன் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் அவரது வீட்டில் இருந்து 33 சவரன் நகைகளை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து பாரதியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 20, 2024

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 24 வழக்கு

image

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (மே 19) போலீசார் நடத்திய சோதனையில் 135 மதுபாட்டில்கள், சுமார் 1,750 ரூபாய் மதிப்புடைய 175 கிராம் கஞ்சா, 260 ரூபாய் மதிப்புடைய 126 கிராம் குட்கா ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இது தொடர்பாக 24 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்

News May 19, 2024

ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறி – பாஜகவினர் கைது

image

காட்பாடி வெள்ளைகல்மேடு பகுதியில் நேற்று ( மே 19) இரவு காங்கேயநல்லூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபாகரனை வழிமறித்து  அவரிடமிருந்து 1000 ரூபாய் பணத்தை வேலூர் மாவட்ட பாஜக சமூக ஊடக பிரிவு பொறுப்பாளர் ராஜேஷ், பாஜக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் நவீன்குமார் ஆகியோர் பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரில் இருவரையும் காட்பாடி போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 19, 2024

வேலூர் அருகே விபத்து

image

வேலூர் அடுத்த மேல்மொணவூர் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் இன்று (மே 19) காலை எதிரே வந்த கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பலத்த காயமடைந்தனர். இருவரையும் மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News May 19, 2024

வேலூர் மேயர் வேண்டுகோள்

image

வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சி “மேயர்” சுஜாதா பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், “குப்பைகளை யாரும் கால்வாய்களில் கொட்ட வேண்டாம். தினமும் மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் நகரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பொதுமக்கள் தயவு கூர்ந்து குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுங்கள் என வேலூர் மாநகராட்சி “மேயர்” சுஜாதா கேட்டுக்கொண்டார்.

News May 19, 2024

வேலூர் மாவட்டத்தில் 234.50 மி.மீ  மழை

image

கோடை காலத்தில் கடுமையான வெயிலை மழை வந்து தணித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ( மே 18)  வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியில் அதிகபட்சமாக 50 MM மழை பதிவானது. பேரணாம்பட்டில் 49 MM மழையும், குடியாத்தம் 41.40MM, கே.வி. குப்பம் 19MM, வேலூரில் 3.60MM மழையும் பதிவானது. மாவட்டம் முழுவதுமாக 234.50MM மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News May 18, 2024

வேலூர் மாணவர்களுக்கு ஓவிய பயிற்சி முகாம்

image

உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு வேலூர் அரசு அருங்காட்சியகம் மற்றும் வட ஆற்காடு ஓவியர் சங்கம் இணைந்து வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால இலவச ஓவிய பயிற்சி முகாம் இன்று (மே 18) நடந்தது. இந்த முகாமை அருங்காட்சியக காப்பாற்றியவர் சரவணன் தொடங்கி வைத்தார். இதில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!