India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணும் பணி காலை 8: 30 மணிக்கு தொடங்கி நடை[பெற்று வருகிறது. வேலூர் மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணி 7215,பா.ஜ.க கூட்டணி 2695, அ.தி.மு.க 635, தி.மு.க கூட்டணி வேட்பாளர் கதிர் ஆனந்த் முதல் சுற்று முடிவில் முன்னிலையில் உள்ளார்.
2024 தேர்தலில் வேலூர் தொகுதியில் மொத்தம் 73.42% வாக்குகள் பதிவாகி உள்ளன. இன்று முதற்கட்டமாக காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் என்னும் பணி துவங்கியது. இதில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தும் 7215 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக சார்பில் ஏ.சி.சண்முகமும் 2695 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக சார்பில் பசுபதி 634 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளனர்.
வேலூர் மக்களவை தொகுதியின் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, வேலூர் மக்களவைத் தொகுதி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்.
திமுக கூட்டணி 7215 வாக்குகளும், பாஜக கூட்டணி 2695 வாக்குகளும், அதிமுக 635 வாக்குகளும் பெற்றுள்ளன.
மக்களவைத் தேர்தல் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு என்ன மையத்தில் இன்று எண்ணிக்கை தொடங்கியது. இதில் குடியாத்தம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுபலட்சுமி தலைமையில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குகள் எண்ணும் பணி தற்போது தொடங்கியது.
வேலூரில் வாக்கு எண்ணும் மையத்தில் கூச்சல், குழுப்பம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் பொது இருக்கைகள் இல்லை என கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கூச்சல், குழப்பத்தால் தபால் வாக்கு எண்ணும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
வேலூர் மாவட்டம் தொரப்பாடி தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் 2024 மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 2024 வேலூர் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 அன்று நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கையானது இன்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சுப்புலட்சுமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் என்னும் பணி துவங்கியது.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (ஜூன் 4) நடக்கிறது. இதை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஓட்டல்களில் உள்ள பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீறி மது விற்பனை செய்தால் சட்டபடி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் மொத்தம் 73.42% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக திமுக சார்பில் கதிர் ஆனந்தும், அதிமுக சார்பில் பசுபதியும், பாஜக சார்பில் ஏ.சி.சண்முகமும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News-உடன் இணைந்திருங்கள்.
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜுன் 3) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 118 மதுபாட்டில்கள், 100 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரே நாளில் 10 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.