Vellore

News June 13, 2024

உதயநிதியை நேரில் சந்தித்த வேலூர் எம்பி

image

திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை நேற்று (ஜூன் 12) வேலூர் எம்பி கதிர் ஆனந்த் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதில் பட்டு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News June 12, 2024

மத்திய அரசை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்

image

பாராளுமன்ற வளாகத்தில் இருந்து அம்பேத்கரின் முழு உருவ சிலையை அகற்றிய மத்திய அரசை கண்டித்து இந்திய குடியரசு கட்சி சார்பில் வேலூர் மாவட்டம் அண்ணா கலையரங்கம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை (ஜூன் 13)  நடைபெறுகிறது. இதில் இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை தலைவருமான செ.கு. தமிழரசன் கண்டன உரை ஆற்ற உள்ளார் என கட்சியின் சார்பில் தெரிவித்துள்ளனர்.

News June 12, 2024

ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

இந்திய அரசின் சார்பில் மனித உயிர்களை மீட்பவர்களுக்கு “ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுகள்” வழங்கி வருகிறது. அதன்படி 2024ஆம் ஆண்டு விருதிற்கான விண்ணப்பங்கள் http://awards.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து 28.06.2024 மாலை 4.00 மணிக்குள் மூன்று நகல்களுடன் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News June 12, 2024

வேலூரில் குறைதீர் கூட்டம்

image

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒவ்வொரு புதன் கிழமையும் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஜூன் 12) நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 25 கோரிக்கை மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பெற்றுக் கொண்டார். மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

News June 12, 2024

வேலூரில் புதிய ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை

image

வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய 5 தாலுகாக்களில் 5,723 பேர் வரை புதியதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அனைத்து விண்ணப்பங்களும் அந்தந்த வட்ட வழங்கல் பிரிவில் அனுமதிக்காக உள்ளது. அனுமதி கிடைத்தவுடன், விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்து, புதிய கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

News June 12, 2024

வேலூரில் விபத்து: 20 பேர் படுகாயம்

image

வேலூர் அடுத்த கருகம்புத்தூர் அருகே இன்று காலை பழுதாகி நின்றுகொண்டிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணித்த 20 பேர் படுகாயமடைந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யார் முந்திச் செல்வது என இரு தனியார் பேருந்துகளுக்கிடையே ஏற்பட்ட விபரீத போட்டியால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் விசாரித்துவருகின்றனர்.

News June 12, 2024

காட்பாடி-ஜோலார்பேட்டை மெமு ரயில் ரத்து

image

காட்பாடி-ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் மெமு விரைவு ரயில் ஜூன் 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது. அதன்படி, காட்பாடியிலிருந்து ஜோலார்பேட்டைக்கு காலை 9.30 மணிக்குச் செல்லும் மெமு விரைவு ரயிலும், மறுமார்க்கமாக ஜோலார்பேட்டையிலிருந்து காட்பாடிக்கு நண்பகல் 12.45-க்கு செல்லும் மெமு விரைவு ரயிலும் நேற்றுமுதல் (ஜூன் 11) வரும் 30ம் தேதிவரை ரத்துசெய்யப்பட்டுள்ளது.

News June 12, 2024

வேலூர் பள்ளி, கல்லூரி அருகே போதைப்பொருள் பறிமுதல்

image

வேலூர் எஸ்பி மணிவண்ணன் உத்தரவின்பேரில் டிஎஸ்பிக்கள் திருநாவுக்கரசு, சரவணன், ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே உள்ள 183 கடைகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் 2.130 கிலோ கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News June 11, 2024

வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜுன் 11) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 150 லிட்டர் கள்ளச்சாராயம், 800 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 49 மதுபாட்டில்கள், 2 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரே நாளில் 16 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். ‌

News June 11, 2024

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி

image

வேலூர் சலவன் பேட்டையை சேர்ந்தவர் வேலு (52) கட்டிட மேஸ்திரி. இவர் இன்று (ஜூன் 11) வேலூர் எஸ்பி அலுவலகத்தில் அளித்த மனுவில் எங்கள் பகுதியை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவரின் வீடு கட்டுமான பணிக்கு சென்ற போது எனது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினார். இதை நம்பி நான் கடந்த 2021 ஆம் ஆண்டு 34,0000 பணம் கொடுத்தேன். ஆனால் இதுவரை வேலை வாங்கித் தரவில்லை. எனவே எனது பணத்தை மீட்டு தரக்கோரி மனு அளித்தார்.

error: Content is protected !!