India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜுன் 17) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 2000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 120 லிட்டர் கள்ளச்சாராயம், 79 மதுபாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரே நாளில் 11 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வேலுார் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் பல் சிகிச்சை மருத்துவ முகாம் இன்று (ஜூன் 17) நடந்தது. இந்த மருத்துவ முகாமை சிறை அதிகாரி அருள்குமரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சிறை மருத்துவர் டாக்டர் பிரகாஷ் ஐயப்பன், பல் மருத்துவர் கார்த்திகேயன் பங்கேற்று கைதிகளுக்கு பல் அடைத்தல், பல் சுத்தம் செய்தல், பல் பிடுங்குதல் போன்றவை நடந்தது. இதில் 120 கைதிகள் கலந்துகொண்டனர்.
வேலூர் வாணியர் வீதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(32). இவர் மண்டி வீதியில் தள்ளு வண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு அவரிடம் வேலூர் சம்பத் நகரை சேர்ந்த ராமு (33), நான் ரவுடி நீ எனக்கு மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் மாமூல் தர வேண்டும் எனக்கூறி மிரட்டியுள்ளார். இதுகுறித்து சதீஷ்குமார் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் இன்று ராமுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 16) பகலில் வெயில் 102.9 டிகிரி கொளுத்திய நிலையில் இரவு திடீரென பலத்த மழை பெய்தது. கே.வி.குப்பத்தில் அதிகபட்சமாக 74.40 மிமீ மழை பதிவானது. ஒடுகத்தூர் 3.00 மிமீ மழையும், குடியாத்தம் மோர்தனா 13.20 மிமீ, வேலூர் 24.10 மிமீ, காட்பாடி 38.80 மிமீ மழையும் பதிவானது. மாவட்டம் முழுவதுமாக 276 மிமீ மழைப்பொழிவு பதிவானதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
வேலூர் கோட்டை சுற்றுச் சாலையில் உள்ள காவலர் நல்வாழ்வு மன்றத்தில் முன்னாள் மத்திய ஆயுத காவல் படை வீரர்களை கௌரவிக்கும் விழா நேற்று (ஜூன் 16) நடந்தது. இந்த விழாவிற்கு சங்க மாநிலத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பாக பணியாற்றிய மத்திய காவல் படை வீரர்களுக்கு வாழ்த்துகள் வழங்கினர். சத்தீஷ்கர் பகுதியில் வீரமரணம் அடைந்த பென்னாத்தூரை சேர்ந்த தேவன் குடும்பத்தினர்களை கௌரவித்தனர்.
வேலூர் பாராளுமன்ற உறுப்பினரும், திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணித் தலைவருமான கதிர் ஆனந்த் இன்று (ஜூன் 17) அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தியாக திருநாளில் அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 88 மதுபாட்டில்கள், 100 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரே நாளில் 14 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
மத்திய குடிமையியல் பணிகளுக்கான முதல் நிலை தேர்வுகள் ( யுபிஎஸ்சி) இன்று (ஜூன் 16) நடந்தது. இந்த தேர்வை வேலூர் மாவட்டத்தில் 9 மையங்களில் மொத்தம் 2222 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இதில் 1273 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மீதமுள்ள 949 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகினர் என தேர்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆம்பூரை சேர்ந்தவர் பராஸ் அகமத் (29). இவர் கடந்த 7ஆம் தேதி வேலூர் ஆற்காடு சாலையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் பராஸ் அகமதிடம் கத்தியை காட்டி மிரட்டி 30 லட்சம் ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சரத், தினேஷ், பிரசாந்த், கோகுல் ஆகிய 4 பேரையும் இன்று கைது செய்தனர்.
மத்திய குடிமையியல் பணிகளுக்கான முதல் நிலை தேர்வுகள் (யுபிஎஸ்சி) இன்று (ஜூன் 16) நடைபெற்றதையொட்டி தேர்விற்கான பார்வையாளர் சரவணவேல் ராஜ், வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி, வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.