Vellore

News June 28, 2024

வேலூர்: 740 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஜூன் 27) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 740 லிட்டர் கள்ளச்சாராயம், 50 பாக்கெட் சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக நேற்று ஒரே நாளில் 10 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்‌ என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். ‌

News June 27, 2024

வளர்ச்சி மற்றும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

image

ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (27.06.2024) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News June 27, 2024

சாலை விபத்துக்கு இழப்பீடு: கலெக்டர் அறிவிப்பு

image

சாலைகளில் விபத்தினை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு மாவட்ட அளவில் குழு அமைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட அளவிலான குழுவினை அணுகி இழப்பீடு தொகையை பெற்று பயனடையுமாறு கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று (ஜூன் 27) தெரிவித்துள்ளார்.

News June 27, 2024

திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

image

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 18ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று (ஜூன் 27) நடந்தது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, துணைவேந்தர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News June 26, 2024

வேலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் நல சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் வருகிற ஜூன் 28ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மாற்றுத்திறனாளிகள் நல சங்க பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு கருத்துகளை தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News June 26, 2024

வேலூர்: புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

image

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று மாலை (ஜூன் 25) ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கந்தன், மாவட்ட இணை செயலாளர் பழனி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News June 26, 2024

வேலூர்: அரசு கல்லூரியில் 2ம் கட்ட கலந்தாய்வு

image

ஒடுகத்தூர் அடுத்த அகரம் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பாட பிரிவுகளுக்கான மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று (ஜூன் 26) தொடங்குகிறது. கணினி அறிவியல், வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு இன்றும், வணிக நிர்வாகவியல், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு நாளை கலந்தாய்வு நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கோமதி தெரிவித்துள்ளார்.

News June 26, 2024

வேலூர் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்தல் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நேற்று (ஜூன் 25) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News June 25, 2024

திருப்பத்தூருக்கு 1250 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் வருகை

image

திருவாரூரில் இருந்து காட்பாடிக்கு 1,250 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இன்று (ஜூன் 25) ரயிலில் வந்தடைந்தது. காட்பாடியிலிருந்து லாரிகள் மூலம் பாகாயம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து லாரிகள் மூலம் வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும் என்று பொது விநியோகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News June 25, 2024

வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் பதவியேற்பு

image

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

error: Content is protected !!