Vellore

News July 1, 2024

கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று(ஜூலை 1) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர்  சுப்புலெட்சுமி  பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News July 1, 2024

வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம்

image

வேலூர் மாவட்டதில் வைட்டமின் ஏ குறைபாடு தடுப்பு மற்றும் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி இன்று(ஜூலை 1) சத்துவாச்சாரி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மண்டலக்குழுத் தலைவர் நரேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News July 1, 2024

10 மற்றும் 11ஆம் வகுப்புக்கு நாளை துணை தேர்வு

image

10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு துணை தேர்வுகள் நாளை (ஜூலை 2) தொடங்க உள்ளது. இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு 9 மையங்களும், பிளஸ் 1 துணைத் தேர்வுக்கு 12 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு மையங்களுக்கு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News July 1, 2024

வேலூர் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்

image

வேலுார் மாவட்டத்தில் 5 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ உயிர்சத்து திரவம் வழங்கும் முகாம் இன்றூ ஜூலை 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை நடக்கும். இந்த முகாம் துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் நடக்கிறது எனவும் மேலும், இதில் 95,633 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News June 30, 2024

வேலூர் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்

image

வேலுார் மாவட்டத்தில் 5 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ உயிர்சத்து திரவம் வழங்கும் முகாம் நாளை ஜூலை 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை நடக்கும். இந்த முகாம் துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் நடக்கிறது எனவும் மேலும், இதில் 95,633 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News June 30, 2024

சிறை அதிகாரிகள் பயிற்சி முகாம் நிறைவு விழா

image

வேலூர் தொரப்பாடியில் உள்ள சிறை அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் (ஆப்கா) சிறை அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று (ஜூன் 29) நடந்தது. இந்த விழாவிற்கு ஆப்கா இயக்குனர் பிரதீப் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா கலந்து கொண்டு பேசினார். இதில் பயிற்சி மைய பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News June 29, 2024

வேலூர் மாவட்ட இளைஞர்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப்-II & IIA-க்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பில்
கலந்துகொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று (ஜூன் 29) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News June 28, 2024

வேலூர்: 19 வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

image

வேலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 19 வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி இன்று (ஜூன் 28) உத்தரவிட்டுள்ளார். அதன்படி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிய சஞ்சனி, அணைக்கட்டு உள்வட்ட வருவாய் ஆய்வாளராகவும், அங்கிருந்த ஜெயந்தி கலெக்டர் அலுவலக நிலப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட 19 வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News June 28, 2024

வேலூர் கலெக்டர் தலைமையில் குறைதீர் கூட்டம்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு இன்று (ஜூன் 28) நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். இதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். மேலும் துறைசார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News June 28, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

image

வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் இன்று (ஜூன் 28) நடந்தது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!