India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடந்து வருகிறது. இந்தக் கலந்தாய்விற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கலந்தாய்வு மையத்தை முற்றுகையிட்டு நேற்று (ஜூலை 3) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 243 அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடந்து வருகிறது. இந்தக் கலந்தாய்விற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கலந்தாய்வு மையத்தை முற்றுகையிட்டு இன்று (ஜூலை 3) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 243 அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று (ஜூலை 3) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் உட்பட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு பட்டா முகாம்களிலும் 2847 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இவர்களில் 2701 பயனாளிகளுக்கு ரூ. 19 கோடியே 2 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களும், 146 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி இன்று ( ஜூலை 2) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க தோப்புகள், பழத்தோட்டத்தில் ஊடுபயிராக பயிரிடுவதை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே பசுந்தீவனம் ஊடுபயிராக பயிரிடுவதற்கு திறமையும் ஆர்வமுள்ள பயனாளிகள் அருகே உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பித்து பயன் பெறலாம் என ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (ஜூலை 2) தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 10ம்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட வேலூர் மாவட்டத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் தலைமையில் 30 பேர் கொண்ட போலீசார் இன்று (ஜூலை 2) விக்கிரவாண்டிக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் வேலூர் மாவட்டத்திற்கு திரும்புவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் விதி எண் 377-ன் கீழ் நேற்று நடந்த விவாதத்தில் வேலூர் எம்பி கதிர்ஆனந்த் பேசினார். அப்போது, “உதான் திட்டத்தின் கீழ் வேலுார் விமான நிலையத்தை விரிவுப்படுத்த கடந்த 2017-இல் 360 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முழுவீச்சில் பணிகள் தொடங்கின. ஆனால், அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக பயன்பாடுக்கு வரவில்லை. விமான நிலையத்தை உடனடியாக பயன்பாடுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகள் குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரும் ஜூலை 4-ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள், வாரிசுதாரர்கள் இந்த குறைகேட்பு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (ஜூலை 1) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 30) இரவு பலத்த மழை பெய்தது. பொன்னை பகுதியில் அதிகபட்சமாக 40.00 மி.மீ மழை பதிவானது. குடியாத்தம் 12.00 மி.மீ மழையும், காட்பாடி 18.50 மி.மீ, அணைக்கட்டு 3.00 மி.மீ, கே.வி.குப்பம் 7.00 மி.மீ, வேலூர் 13.20 மி.மீ மழையும் பதிவானது. மாவட்டம் முழுவதுமாக 114.40 மி.மீ மழைப்பொழிவு பதிவானதாக மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (ஜூலை 1) நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இயற்கை மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிகளின் ஈமசடங்கிற்கான உதவித்தொகை காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.