India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் பதிவு மண்டலத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செய்யாறு ஆகிய 5 பதிவு மாவட்டங்களில் 45 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் ஊழியர்களுக்கான புத்தாக்க பயிற்சி காட்பாடி வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. இதில் வேலூர் மண்டல பதிவுத்துறை டி.ஐ.ஜி. அருள்சாமி கலந்து கொண்டு அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகள் பதிவு செய்யக்கூடாது என்று பேசினார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜூலை 17) நடத்திய அதிரடி சோதனையில் 81 மதுபாட்டில்கள், 2 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 10 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் உதவி காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர், முதல் நிலைக் காவலர், இரண்டாம் நிலைக் காவலர் என மாவட்டம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றிய 97 காவலர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து இன்று (ஜூலை 17) வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கதிர் ஆனந்த் 2வது முறையாக வெற்றி பெற்றதையடுத்து இன்று (ஜூலை 17) வேலூர் மாவட்டம் கேவி குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு கே.வி. குப்பம் ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழைபெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <
அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து மதத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (ஜூலை 16) நடத்திய சோதனையில் 22 மதுபாட்டில்கள், 100 கிராம் கஞ்சா, 700 கிராம் குட்கா பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 7 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜூலை 16) நடத்திய சோதனையில் 22 மதுபாட்டில்கள், 100 கிராம் கஞ்சா, 700 கிராம் குட்கா பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 7 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட அலுவலகத்தில் எஸ்பி மணிவண்ணன் தலைமையில் இன்று (ஜூலை 16) பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் மூலம் பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் தரமான கல்வி, பாதுகாப்பு, பெண் சிசுக்கொலைகளை தடுப்பது, பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளை கையாளும் முறை ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. சமூக நல அலுவலர் உமா, காவலர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.