Vellore

News February 2, 2026

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்ரவரி 1) இரவு முதல் இன்று (பிப்ரவரி 2) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 2, 2026

வேலூர்: பஸ்சில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ குட்கா பறிமுதல்!

image

காட்பாடி, கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் நேற்று இரவு போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக ஆந்திராவில் இருந்து வந்த பஸ்சில் போலீசார் சோதனை செய்தனர். பதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜூ (52) என்பவர் வைத்திருந்த பையில் தடை செய்யப்பட்ட 12 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து ராஜூ கைது செய்து. அவரிடம் இருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

News February 1, 2026

வேலூர்: மொபட்டில் இருந்து விழுந்த முதியவர் பலி!

image

வேலூர், விருப்பாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி (63). இவர் நேற்று முன்தினம் இரவு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 1, 2026

வேலூர்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, வேலூர் பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9042144504-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 1, 2026

வேலூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது ஆகியவை VAO-வின் வேலை ஆகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றாலும், லஞ்சம் கேட்டாலும் இந்த நம்பரில் (0416-2220893) புகார் அளிக்கலாம். ஷேர் செய்யுங்க.

News February 1, 2026

வேலூர்: whatsapp-ல் சட்ட ஆலோசனை பெறுவது எப்படி?

image

வேலூர் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News February 1, 2026

வேலூர்: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

image

வேலூர் மாவட்டத்தில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2.பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News February 1, 2026

வேலூர்: தவறான நபருக்கு ‘Online Payment’? உடனே CALL

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News February 1, 2026

வேலூர்: தூக்கில் முடிந்த தொழிலாளியின் ஆயுள்!

image

வேலூர் துத்திப்பட்டு எம்.ஜி.ஆர்.தெருவை சேர்ந்தவர் விஷ்ணு (41), கூலி தொழிலாளி. இவருக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் விஷ்ணு நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஷ்ணு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 1, 2026

வேலூர் தாய்மார்களுக்கு ரூ.11,000! CLICK HERE

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 1515-ஐ அழைக்கவும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!