India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய தொழிலாளர் அமைச்சகம் அனைத்து மாவட்டங்களிலும் வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதமும் நடத்தவும் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் ஜூலை 29ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை பென்டெலண்ட் அரசு மருத்துவமனை அருகே உள்ள தொழிலாளர் மாநில காப்பீட்டு திட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
வேலூா் மாவட்டத்தில் உள்ள 798 பள்ளிகளுக்கு புதிய பள்ளி மேலாண்மைக் குழுக்களை தோ்வு செய்வதற்கான தோ்வுகள் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். அனைத்து பள்ளிகளிலும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி பெற்றோா்களை வரவழைத்து பள்ளி மேலாண்மைக் குழு சாா்ந்த தகவல்களையும், ஆலோசனைகளையும் தலைமையாசிரியா் வழங்க வேண்டும் எனவும் ஆட்சியர் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பவர் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜூலை 25) நடத்திய சோதனையில் 42 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 6 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
காட்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் போதைப்பொருள் விற்பனையில் டிகாஸ்டர் சேவியர் பால் என்பவர் ஈடுப்பட்டு வந்துள்ளார். இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (ஜூலை 25) குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சேலம் மத்திய சிறையில் அடைக்க அதிரடியாக உத்தரவு ஆணையை பிறப்பித்தார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில், இன்று இரவு 7 மணி வரை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் இறைவன்காடு, கந்தனேரி, வசந்தநடை, கழனிப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளை சார்ந்த பொதுமக்களுக்கு இறைவன்காடு கிராமத்தில் உள்ள C.M. மஹாலில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (ஜூலை 25) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வரும் 33 பேரின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாக தமிழ்நாடு வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஷ்ரா கார்க் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் நடவடிக்கைகளையும் கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கோபாலகிருஷ்ணன் என்பவரை சென்னையில் வேலூர் சிபிசிஐடி போலீஸ் கைது செய்தது. சக்திவேல் என்பவரை கழுத்தை அறுத்த வழக்கில் 2020ம் ஆண்டு முத்துராமலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த கோபாலகிருஷ்ணன் நேற்று தற்போது கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று(ஜூலை 24) பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) தனலட்சுமி (பொ) மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) தயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் நாளை தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். இதில் மின் கட்டண உயர்வு, தமிழகத்திற்கு காவிரி நதி நீரை திறக்காத கர்நாடக அரசும் மற்றும் மத்திய அரசை கண்டித்தும் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.