Vellore

News August 4, 2024

உங்கள் நண்பரை பற்றி கூறுங்கள்

image

சர்வதேச நண்பர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. நம்ம வேலூர் மாவட்டத்தில் நண்பர்களோடு ஊர் சுற்றுவது, கிரிக்கெட் ஆடியது, பேருந்து நிறுத்ததில் அமர்ந்து அரட்டை அடிப்பது, தோழிகளுடன் செல்ஃபி எடுப்பதுஎன சினிமாவை மிஞ்சும் அளவுக்கு செய்த சேட்டைகளுன்டு. நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, உங்க நண்பர்களுக்கு சேர் செய்யுங்க.

News August 4, 2024

ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

image

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதத்தில் பெறலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே வேலூரில் உள்ள 4,48,641 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெற இயலாதவர்கள் இம்மாதம் பெறலாம். ஷேர் செய்யவும்.

News August 4, 2024

வேலூர் மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் மாற்றம்

image

வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களளில் பணிபுரியும் 45 காவல் ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வேலூர் சரக டி.ஐ.ஜி சரோஜ் குமார் தாக்கூர் நேற்று வெளியிட்டுள்ளார். மேலும், அந்ததந்த மாவட்ட எஸ்பி-க்கள் மாற்றம் பெற்றவர்களுக்கு ஆணையை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.

News August 3, 2024

வேலூர் மாவட்டத்தில் நாளை திறனாய்வு தேர்வு

image

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு வேலூர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 4) நடைபெற உள்ளது. இந்த தேர்வை வேலூர் மாவட்டத்தில் 10 மையங்களில் மொத்தம் 2732 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 3, 2024

வேலூர் சரகத்தில் 45 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

image

வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 45 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஐஜி சரோஜ்குமார் தாகூர் இன்று (ஆகஸ்ட் 3) உத்தரவிட்டுள்ளார். பணியிட மாற்றம் பெற்ற காவல் ஆய்வாளர்கள் விரைவில் அவர்களுக்கு மாற்றப்பட்ட காவல் நிலையத்தில் பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள் என தெரிவித்தார்.

News August 3, 2024

வேலூர் மாவட்டத்தில் 7 பேர் மீது வழக்கு பதிவு

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஆகஸ்ட் 3) நடத்திய சோதனையில் 81 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.

News August 3, 2024

தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (03.08.2024) ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News August 3, 2024

வேலூர் விஐடியில் 8562 மாணவர்களுக்கு பட்டமளிப்பு 

image

விஐடியில் 39ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று(ஆகஸ்ட் 2) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் மொத்தம் 8,205 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் மற்றும் 357 முனைவர் பட்டம் அறிஞர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதற்கு விஐடி வேந்தர் கே.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். உடன் துணைவேந்தர் ஜிவி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News August 3, 2024

மகப்பேறு வார்டு உள்ளே செல்வதற்கு ஆதார் கட்டாயம்

image

வேலூர் அரசு மருத்துவ கல்லூரி
மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை கடத்தல் சம்பவத்தால் மருத்துவமனை நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் “சீமான்ஸ் ” (மகப்பேறு வார்டில்) உள்ளே செல்வதற்கு ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டை கட்டாயம் என அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வேலூர் மக்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்.

News August 3, 2024

வேலூர் டெங்கு பாதிப்பு கலெக்டர் திடீர் ஆய்வு

image

வேலூர் மாநகராட்சி 3 வது மண்டலத்திற்கு உட்பட்ட 57 வது  வார்டில் சி.எம்.சி. காலனியில் டெங்கு பாதித்த நபரின் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று(ஆகஸ்ட் 3) நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது வேலூர் மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், மாநகர நல அலுவலர் கணேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!