India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று நடத்திய சோதனையில் 12 மதுபாட்டில்கள் மற்றும் 3 ஆயிரம் மதிப்புடைய 300 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தேசியக்கொடி 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த தேசியக்கொடிகளை https:/www.epostoffice.gov.in/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று வேலூர் கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன் இன்று தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று
10ஆவது தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியை காட்பாடி ஊராட்சி ஒன்றியம் சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காட்பாடி ஒன்றிய குழுத்தலைவர் வேல்முருகன், திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் செந்தில் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மாபெரும் இரத்த தான முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, கல்லூரி முதல்வர் மேகலா, மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய பொது செயலாளர் வேலூர் இப்ராஹிம் நேற்று வேலூரில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது, திமுக அரசு கனிம வளங்களை கொள்ளை அடித்து நாசம் செய்கிறார்கள், இந்திய கூட்டணியில் உள்ளவர்கள் மக்களை திசை திருப்பவே குறை கூறி வருகின்றனர். மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரயில்வே துறையில் ரூ. 6000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பேசினார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஆகஸ்ட் 6) நடத்திய சோதனையில் 15 மதுபாட்டில்கள் மற்றும் 2 ஆயிரம் மதிப்புடைய 200 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பேரணாம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் நாளை ஆகஸ்ட் 7-ம் தேதி மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் 15 துறைகளை சார்ந்த தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து தீர்வுகாணுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (ஆகஸ்ட் 6) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பள்ளிகொண்டா அடுத்த கழனிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி நாகம்மா (65) இன்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு பள்ளிகொண்டா ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல மருத்துவமனையில் அமரர் ஊர்தி வாகனம் இல்லாததால் சடலத்தை பைக்கில் வைத்து எடுத்து சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 01.07.2024 முதல் 31.07.2024 வரை மணல் கடத்தல், கொலை, கொள்ளை, போதைப்பொருள், மதுவிலக்கு வழக்கு மற்றும் பாலியல் வழக்குகளில் தொடர்புடைய 28 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இன்று
(ஆகஸ்ட் 6) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 6) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.