India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் மழை நீரில் மூழ்கி சேதமாகின. மேலும், ஒடுகத்தூர் அருகே உள்ள உத்திரகாவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாகவும் ,மழையின் அளவு அதிகரித்ததன் காரணமாகவும் அப்பகுதியில் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கிச்சளி சம்பார். ஐ.ஆர்59 போன்ற நெல் ரகங்கள் நீரில் மூழ்கியது.
வேலூர் மாவட்டம் வனச்சரகத்தில் பணியாற்றி வரும் வனச்சரகர் குமார் பணியில் மெத்தனம் காட்டியதாக கூறி வேலூர் மாவட்ட வன அலுவலர் குருசாமி தபலா விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை மண்டல வனப்பாதுகாவலர் ராகுலிடம் வழங்கினார். அந்த அறிக்கையின் அடிப்படையில் வேலூர் வனச்சரக அலுவலர் குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மண்டல வனப்பாதுகாவலர் ராகுல் நேற்று (ஆகஸ்ட் 10) உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாவிலும் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் இன்று (ஆகஸ்ட்.10) தேதி நடந்தது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், புதிய குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல் என மொத்தம் ஒரே நாளில் 179 மனுக்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பாலாற்றில் தன் அக்காவுடன் குளிக்க சென்ற 8 வயது சிறுமி திவ்யா நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். இது குறித்த தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றுள்ளனர். நாளை பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கான நேர்காணல் இன்று ( ஆகஸ்ட் 10 ) நடந்தது. இதில் 3 மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்பட உள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தாராபடவேடு பகுதியை சேர்ந்தவர் துணைவியாபாரம் செய்து வரும் மகாலட்சுமி. இவரிடம் தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்த பாலு மற்றும் உமா என்கிற தம்பதியினர் இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி ரூ.55 லட்சம் வாங்கியுள்ளனர். ஆனால் அவர்கள் வாங்கிய பணத்தை திருப்பி தராததால் ஏமாற்றம் அடைந்த மகாலட்சுமி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 9) இரவு பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அதிகபட்சமாக குடியாத்தத்தில் 40 மி.மீ மழை பதிவாகியுள்ளது. வேலூர் 14.20 மி.மீ, சத்துவாச்சாரி 20 மி.மீ, பேரணாம்பட்டு 25.80 மி.மீ, திருவலம் 18.60 மி.மீ, காட்பாடி 13.40 மி.மீ, விரிஞ்சிபுரம் 17.20 மி.மீ , ராஜாதோப்பு 17மி.மீ , மோர்தானா20 மி.மீ, மேலாத்தூர் 39.40 மி.மீ, மழை பதிவாகியுள்ளது.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, வேலுார் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று காலை 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டும் என அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று உத்தரவிட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாக ரவுடி நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். வேலூர் சிறையில் உள்ள நாகேந்திரனை கைது செய்தற்கான வாரண்ட் அவரிடம் வழங்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தாமன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தையும், வட சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்தவருமான நாகேந்திரன் தற்போது சிறையில் உள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டத்தில் நாளை காலை 8.30 மணி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போதும், பயணங்களின் போதும் கவனமாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.