India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுதந்திர தினமான இன்று வேலூரில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் என அனைத்தும் நாளை காலை 12.00 மணி வரை மூட உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் காவலர் பயிற்சி பள்ளி கூடுதல் எஸ்.பி.ராதாகிருஷ்ணனுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக காவல் துறையைச் சேர்ந்த 23 பேருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டதில் வேலூர் போலீசாருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதேபோல், வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் புனிதாவுக்கு முதல்வர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஆகஸ்ட் 14) நடத்திய சோதனையில் 69 மதுபாட்டில்கள், மற்றும் 1.5 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், தொடர்புடைய 6 பேர் மீது ஒரே நாளில் மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில்முனைவோரும் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களாக வழங்கலாம் என ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (ஆகஸ்ட் 14) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் உள்ள மதுபான பார்கள் அனைத்தும் நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மது பானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும், அதையும் மீறி விற்பனை செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. அண்மையில் பெய்த மழையால், குடியிருப்பு பகுதிகளில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இன்று கனமழை பெய்யும் என்பதால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. இன்று மழை பெய்யுமா?
தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு சமூக முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை, வீரதீர செயல்புரிந்த 13-18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை விருதும், மாநில அரசின் சார்பில் 1 லட்சத்துக்கு காசோலை வழங்கப்படும். எனவே தகுதியானவர்கள் http:// awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
நாளை 78வது சுதந்திர தின விழா வேலூர் கோட்டை கொத்தளத்தில் காலை 8 மணியளவில் கலெக்டர் சுப்புலட்சுமி தேசிய கொடியேற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் தேசியகொடியேற்றி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மார்க்கெட் போன்ற இடங்கள் என மொத்தம் மாவட்ட முழுவதும் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.