India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் கிரீன் சர்க்கிளில் உள்ள தனியார் ஹோட்டலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று செப்டம்பர் 17 பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மதுவிலக்கு மகளிர் மாநாட்டை தேர்தலுடன் முடிச்சு போட வேண்டாம். தேர்தல் நிலைப்பாடு வேறு, சமூகப் பொறுப்புணர்வு வேறு. ஆகவே தோழமைக் கட்சியின் மகளிர் அணி தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என கூறினார்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில் இன்று (16.09.2024) பாகாயம் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஏ.கட்டுப்படி கிராமத்தில் 100 நாள் வேலை செய்யும் மகளிரிடம் பெருகிவரும் இணையவழி குற்றங்கள் பற்றியும் அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க தேவையான வழிமுறைகள் பற்றியும், குழந்தை திருமணம், காவல் உதவி செயலி மற்றும் போக்சோ தொடர்பாகவும் விளக்கமளித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் மிலாடி நபி என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று ( செப்1 7 ) விடுமுறை அளிக்கப்பட்டது இதனால் நேற்று கடைகளில் குடிமகன்கள் அதிக அளவில் மதுபானங்கள் வாங்கினர் இதனால் வழக்கத்தை விட விற்பனை அதிகரித்தது. வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 114 கடைகளில் வழக்கமாக 4 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகி வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 5.20 கோடிக்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் துன்புறுத்தல் விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக நிலை அறிக்கை தயாரிப்பு பணி நடைபெற்று வருவதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. வேலூர் ஜெயிலர் அருள்குமரன் உள்ளிட்டோரிடம் நேற்று சிபிசிஐடி அதிகாரிகள் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். வேலூர் சிறை டிஐஜி-யின் பாதுகாவலர் ராஜு, சிறை காவலர்கள் உட்பட அனைவரிடமும் விசாரணை நடைபெற்றது.
இறைத்தூதர் முஹம்மது நபிகள் நாயகம் பிறந்த நாள் அனைவராலும் மிலாடி நபியாக கொண்டாடப்படுகிறது. சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்கு துணையாக இருக்கும்போது எந்த சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது என்ற நம்பிக்கை அனைவரின் மனதிலும் விதைத்தவர் நபிகளார். மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளை எழுச்சியோடு கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்திற்கு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு வரும் 19ம் தேதி வரவுள்ளனர். இந்த குழுவானது காலை 9.30 மணிக்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் வேலூர் சுற்றுலா மாளிகையில் கூடி நிறுவனம், வாரியம், கழகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து குழுவால் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சிவக்குமாரை வீட்டு வேலைக்கு பயன்படுத்தியது மற்றும் நகை திருடியதாக தாக்கிய வழக்கில் தொடர்புடைய ஜெயிலர் அருள்குமரன், டிஐஜியின் பாதுகாவலர் ராஜூ, போலீசார்கள் பிரசாந்த், விஜி ஆகிய பேருக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் இவர்கள் நேற்று சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
சுங்கச்சாவடி கட்டண கொள்ளையை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டத்துக்கு த.மு.மு.க. மாநில செயலாளர் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 460 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை மாலை 6 மணிக்கு மேல் விடுதலை செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் 7 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். பேர்ணாம்பட்டு தாசில்தார் விநாயகமூர்த்தி, வேலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் நேர்முக உதவியாளராகவும், அங்கு பணியாற்றிய மெர்லின் ஜோதிகா குடியாத்தம் தாசில்தராகவும், குடியாத்தத்தில் பணியாற்றிய சித்ரா தேவி, கலெக்டர் அலுவலக தனி தாசில்தாராகவும் (நடுவர் தீர்ப்பாயம்) இவர்கள் உள்பட 7 பேர் பணியிட மாற்றும் செய்யப்பட்டுள்ளனர்
பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அனீஸ்அகமது (42). இவர் பெற்ற மகளை கர்ப்பமாக்கிய வழக்கில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 14-ந் தேதி அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது இதையடுத்து வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.