Vellore

News August 17, 2024

வேலூர் சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில் முனைவோரும் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று சென்னையில் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஆக 20ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேற்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 16, 2024

ஒரே நாளில் 5 பேர் வழக்கு பதிவு – எஸ்பி

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஆகஸ்ட் 16) சோதனையில் ஈடுபட்டனர். இதில் 88 மதுபாட்டில்கள், 20 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 5 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மதிவாணன் எச்சரித்துள்ளார்.

News August 16, 2024

வேலூரில் எம்எல்ஏ ஆய்வு

image

வேலூர் மாநகராட்சி 4வது மண்டலத்திற்கு உட்பட்ட 56வது வார்டில் உள்ள குமாரசாமி தெருவில் புதிய கால்வாய் அமைக்கும் பணியை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 16) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது இளநிலை பொறியாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News August 16, 2024

வேலூரில் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

image

வேலூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நாளை (ஆகஸ்ட் 17) மாலை 4 மணியளவில் வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேலூர் மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 16, 2024

வேலூரில் ரூ.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

image

நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவில், 11 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வழங்கினார். பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணிபுரிந்த 583 அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும் வழங்கினார். மேலும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர்.

News August 16, 2024

குடியாத்தம் கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது

image

குடியாத்தம் நகர, தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த காதர் பாஷா (19), குலாப் (50), குடியரசன் (24) ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி மதிவாணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கலெக்டர் சுப்புலெட்சுமி நேற்று 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

News August 15, 2024

வேலூரில் ஒரே நாளில் 168 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஆகஸ்ட் 15) நடத்திய சோதனையில் 168 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 9 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.

News August 15, 2024

பேரணாம்பட்டில் மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பத்தலபல்லி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News August 15, 2024

வேலூர் கலெக்டர் கொடியேற்றினார்

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு, வேலூர் கோட்டை கொத்தளத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (ஆகஸ்ட் 15) தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, வருவாய் கோட்டாட்சியர் கவிதா, மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். எம்எல்ஏ கார்த்திகேயன் மற்றும் மேயர் சுஜாதா கலந்து கொண்டனர்.

News August 15, 2024

வேலூர் கலெக்டர் காந்தி சிலைக்கு மரியாதை

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வேலூர் கோட்டை நுழைவு வாயில் பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!