India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று நடத்திய சோதனையில் 56 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இத்தகைய தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று நடத்திய சோதனையில் 56 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இத்தகைய தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வெளியே செல்லும் பொதுமக்கள், குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யுமா?
வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் கடந்த ஜூலை 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது. இந்த முகாம்களில் மொத்தம் 33,365 மனுக்கள் வந்துள்ளன. இதில் உடனடியாக 4,225 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 28,540 மனுக்கள் நிலுவையில் உள்ளன. 56 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 600 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. வேலூர் தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய 57 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏரளாமானோர் விண்ணப்பித்திருந்தனர்.<
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 3ஆவது புதன்கிழமை தாலுகா அளவில் கலெக்டர் தங்கி கள ஆய்வில் ஈடுபட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி நாளை (ஆகஸ்ட் 21) வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவில் ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ திட்டமானது கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது. அதன்படி வேலுார் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு மொத்தம் 26 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதன் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறையிடம் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களின் விவரங்களை சமர்ப்பித்து பரிந்துரைக்கப்படவும் உள்ளது என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடி மதிப்பில் அரசு கால்நடை பன்முக மருத்துவமனை கட்டிடங்களை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 20) திறந்து வைக்க உள்ளார். இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொள்கிறார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் திட்ட முகாம் வருகிற ஆகஸ்ட் 23-ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 30 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இந்த முகாம் அனைத்து அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றின் மூலமாக சுகாதார பணியாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது என கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று (ஆகஸ்ட் 19) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஆகஸ்ட் 19) சோதனையில் ஈடுபட்டனர். இதில் 26 மதுபாட்டில்கள், தடை செய்யப்பட்ட 100 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.