India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வருகிற 31-ந் தேதி ஓட்டேரி முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் இன்று (ஆகஸ்ட் 24) நடந்தது. இந்த கூட்டத்திற்கு இந்து முன்னணி நிர்வாகிகளை அழைக்கவில்லை எனக்கூறி குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தற்போது இந்து முன்னணி நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு தொடர்பாக 2024 பாராளுமன்ற பொது தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் முகவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சி சார்ந்த வேட்பாளர்களின் முகவர்கள், காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு இன்று (ஆகஸ்ட் 24) தனது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்ச்சியில் கட்சியினர் உடன் கலந்து கொண்டனர்.
காட்பாடி காவல் நிலையத்தில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன் கஞ்சா வழக்கில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதி காமேஷ் கைவிலங்குடன் தப்பி ஓடினார். இதையடுத்து தப்பி ஓடிய காமேஷை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை (ஆகஸ்ட் 24) கசம் அருகே மலையில் பதுங்கி இருந்த தப்பி ஓடிய விசாரணை கைதி காமேஷ் மற்றும் அவருடன் இருந்த மூன்று நபர்களையும் போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் விபத்து நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அணைக்கட்டு தாலுகாவில் விபத்தில் இறந்த 40 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.40 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஆர்டிஓ பங்கேற்று நிவாரண தொகையை வழங்கினார்.
வேலூர் எம்பி கதிர் ஆனந்திடம் நேற்று (ஆகஸ்ட் 23) நிருபர்கள் வேலூர் விமான நிலையம் திறப்பு குறித்து கேட்டனர். அதற்கு விமான நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பாக மத்திய அரசுதான் பதிலளிக்க வேண்டும். அதேசமயம் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன்நாயுடு அடுத்த 10 நாட்களுக்குள் நேரில் ஆய்வு செய்வதாக உறுதியளித்துள்ளார். விரைவில் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என கூறினார்.
வேலூர் எம்பி கதிர் ஆனந்திடம் இன்று (ஆகஸ்ட் 23) நிருபர்கள் வேலூர் விமான நிலையம் திறப்பு குறித்து கேட்டனர்.அதற்கு விமான நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பாக மத்திய அரசுதான் பதிலளிக்க வேண்டும்.அதேசமயம் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன்நாயுடு அடுத்த 10 நாட்களுக்குள் நேரில் ஆய்வு செய்வதாக உறுதியளித்துள்ளார். விரைவில் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என கூறினார்.
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 23) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
தஞ்சாவூரில் இருந்து இன்று (ஆகஸ்ட் 23) 1,250 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் காட்பாடிக்கு ரயில் மூலம் வந்தடைந்தது. இங்கிருந்து லாரிகள் மூலம் பாகாயம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டவுள்ளது. அங்கிருந்து லாரிகள் மூலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும் என்று பொது விநியோகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.