India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே பன்னீர்செல்வம் என்பவருக்கு நேற்று முன்தினம் போன் செய்த மர்ம நபர்கள் பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் பெயரைக் கூறி தங்களுக்கு கார் விழுந்திருப்பதாக 12,500 வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறி பணத்தை செலுத்திய உடன் இணைப்பை துண்டித்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர் வேலூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற வேலூர் சங்கமும் நம்ம ஊரு திருவிழா நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி நேற்று (செப் 29) கலந்துகொண்டு கலைஞர்களுக்கு கலை மன்ற விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மேயர் சுஜாதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லையைச் சேர்ந்த ரவுடி எஸ்டேட் மணி வேலூர் சிறையில் இருந்தபோது சிறைகாவலர்களை தாக்க முயன்றதாக பாகாயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். எஸ்டேட் மணியை பிடிக்க நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது. இந்நிலையில் கடந்த 27-ம் தேதி மூனாறில் துப்பாக்கி முனையில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் இன்று அடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் புரட்டாசி மாத அமாவாசை ஊஞ்சல் சேவை (அக்டோபர் 2) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் வேலூர் மண்டலம் சார்பில் வேலூரில் இருந்து 50 சிறப்பு பஸ்களும், ஆற்காட்டில் இருந்து 20 சிறப்பு பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 30 பஸ்களும் மேல்மலையனூருக்கு இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் “வேலூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா” கோட்டை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு விழா இன்று செப்டம்பர் 29 மாலை 6 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடக்க உள்ளது. இதில் வேலூர் மாவட்ட மக்கள் வருகைதந்து நம் மண்ணின் கலைகளை கண்டு களித்து கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
வேலூர் மாவட்டத்தில் இணையதள குற்றங்கள் நடைபெறுவதை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். எனினும் பொதுமக்கள் மர்ம நபர்களிடம் ஏமாந்து பணத்தை இழக்கின்றனர். குறிப்பாக பகுதி நேர வேலை, என மர்ம நபர்கள் மோசடி செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீப நாட்களாக குடும்ப உறுப்பினரை கடத்திவிட்டதாக ஏமாற்றி பணம் பறிக்கும் செயல்கள் நடப்பதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காட்பாடி காவல் நிலைய போலீசார் நேற்று காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து பணிகள் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அவரிடம் 1. 1/2 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது இதை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் கோபாலபுரம் பகுதியை சேர்ந்த நவீன் குமார் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது இதைதொடர்ந்து, வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் வருகிற அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று கூட்டப்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பல்வேறு இடங்களில் மதுபாட்டில் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க இன்று (செப்டம்பர் 27) மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 56 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் “வேலூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா” கோட்டை மைதானத்தில் நாளை செப்டம்பர் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் 400 கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளோடு நடைபெறவுள்ளது. எனவே வேலூர் மாவட்ட மக்கள் வருகைதந்து நம் மண்ணின் கலைகளை கண்டு களித்து கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.