India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 27) இரவு ரோந்து பணி செல்லும் காவல்துறை காவல் ஆய்வாளர் (சீனிவாசன்) தலைமையில் இன்று இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. இதில் வடக்கு காவல் நிலையம், தெற்கு காவல் நிலையம், சத்துவாச்சாரி, வேலூர் தாலுக்கா, விரிஞ்சிபுரம், பாகாயம், அரியூர், வேப்பங்குப்பம், பள்ளிகொண்டா, அணைக்கட்டு காவல் நிலையம் ஆகிய பகுதியில் இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. எண்-9498150181
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று நடத்திய சோதனையில் 80 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
மேற்கு வங்கத்திலிருந்து நெல்லை நோக்கி சென்ற ரயில் நடுவழியில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. ரயிலில் பிரேக் பைண்டிங்கில் புகை வந்ததால் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல். பயணி ஒருவர் அபாய சங்கிலியை இழுத்ததால் பிரேக் பைண்டிங்கில் புகை ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரி தகவல். சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது.
வேலூரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்படும் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று சதுப்பேரி ஏரியில் கரைக்கப்படுகிறது . இந்நிலையில் விநாயகர் சிலை கொண்டு செல்லும் ஊர்வலம் பாதையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகளை வேலூர் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோட்டாட்சியர் கவிதா உத்தரவிட்டார்
கேரளாவில் இருந்து சென்னை வந்த விரைவு ரயிலில் பெண் மென் பொறியாளர் ஒருவர் இன்று பயணித்துள்ளார். ரயில் காட்பாடி அருகே வந்து கொண்டு இருந்த போது இளைஞர்கள் 2 பேர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இது குறித்து அந்த பெண் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், அவருக்கு மருத்துவ சோதனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (ஆகஸ்ட் 26) நடத்திய சோதனையில் 115 மதுபாட்டில்கள், 100 கிராம் கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய 1 இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைதாகி சிறையிலுள்ள சரவணன் (41) என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி மதிவாணன் மாவாட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன் பேரில் நேற்று (ஆகஸ்ட் 26) சரவணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார்.
காட்பாடி பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவரிடம் WhatsApp மூலம் பேசி வந்த நபர் ஒருவர், தங்களுக்கு பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாக கூறி அந்த பெண்ணிடம் இருந்து 3.5 சவரன் தங்க நகையை ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தங்க நகையை மீட்டு இன்று ( ஆகஸ்ட் 26 ) வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உரியவரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை புத்தக வெளியீட்டு விழாவில் மூத்த அமைச்சர்களை எப்படி சமாளிக்கிறீர்கள் என்று முதல்வர் ஸ்டாலினைப் பார்த்து நடிகர் ரஜினி பேசியிருந்தார். இதுகுறித்த கேள்விக்கு, அமைச்சர் துரை முருகன் மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி தாடி வளர்த்து, வயதானவர்கள் எல்லாம் நடிப்பதினால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது என்று கூறியிருந்தார். அதற்கு தற்போது ரஜினிடம் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.
வேலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பேச்சுப்போட்டி மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (ஆக 25) நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் வழங்கினார். இதில் எம்எல்ஏ கார்த்திகேயன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் திண்டுக்கல் லியோனி, மேயர் சுஜாதா உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.