Vellore

News August 30, 2024

வேலூர் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி இன்று (ஆகஸ்ட் 30) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். இதில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News August 30, 2024

வேலூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 30, 2024

மேல்மலையனூருக்கு 100 சிறப்பு பேருந்துகள்

image

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் சேவை செப். 2 ஆம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் வேலூர் மண்டலம் சார்பில் வேலூரில் இருந்து 50 சிறப்பு பஸ்களும், ஆற்காட்டில் இருந்து 20 சிறப்பு பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 30 சிறப்பு பஸ்களும் மேல்மலையனூருக்கு இயக்கப்படுகிறது என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 30, 2024

வேலூர் ஒரே நாளில் 128 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (ஆகஸ்ட் 29) நடத்திய சோதனையில் 128 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.

News August 29, 2024

வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி

image

வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 29) இரவு ரோந்து பணி செல்லும் காவல்துறை காவல் ஆய்வாளர் லதா தலைமையில் ரோந்து பணி நடைபெற உள்ளது. இதில் வடக்கு காவல் நிலையம், தெற்கு காவல் நிலையம், சத்துவாச்சாரி, வேலூர் தாலுக்கா, விரிஞ்சிபுரம், பாகாயம், அரியூர், வேப்பங்குப்பம், பள்ளிகொண்டா, அணைக்கட்டு காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. எண்-9498148925

News August 29, 2024

வேலூரில் தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம்

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வருகிற 31ஆம் தேதி (சனிக்கிழமை) முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 29, 2024

வேலூரில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஆலோசனை கூட்டம்

image

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஒன்றிய குழு தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஆகியோருக்கான வட்டார கிராம வறுமை குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் எம்எல்ஏக்கள் கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News August 29, 2024

குடியாத்தம் அருகே உணவகத்தில் மது பாட்டில் விற்றவர் கைது

image

குடியாத்தம் அடுத்த மேலாலத்தூர் பகுதியில் தனியார் உணவகத்தில் மதுபாட்டில் விற்பனை செய்து வருவதாக குடியாத்தம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த உணவகத்தில் போலீசார் நடத்திய சோதனையில் கர்நாடக மது பாட்டில் விற்பனை செய்தது தெரிய வந்தது. மேலும், உணவக உரிமையாளர் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 29, 2024

வேலூர் அருகே ராணுவ வீரர் உடல் நல்லடக்கம்

image

வேலூர் அடுக்கம்பாறை அடுத்த ஆற்காட்டன் குடிசையை சேர்ந்த ராஜேஷ் இந்திய ராணுவத்தில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட ராஜேஷின் உடலுக்கு சென்னையை சேர்ந்த ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்தும், தேசிய கொடி போர்த்தியும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ராஜேஷின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

News August 29, 2024

வேலூர் அருகே வாலிபரிடம் ரூ.37 லட்சம் மோசடி

image

வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 28) நடந்தது. இதில் அணைக்கட்டை சேர்ந்த வாலிபர் அளித்துள்ள மனுவில்; தனது ஊரைச் சேர்ந்த பெண்ணும், வாலாஜா பகுதியைச் சேர்ந்த பெண்ணும் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி தருவதாகவும் கூறினார். இதையடுத்து நான் இதுவரை ரூ. 37 லட்சம் கொடுத்துள்ளேன். ஆனால் வட்டி பணம் தரவில்லை என மனு அளித்தார்.

error: Content is protected !!