Vellore

News September 3, 2024

வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி

image

வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செல்லும் காவல்துறை காவல் ஆய்வாளர் (காண்டீபன்) தலைமையில் இன்று இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. இதில் வடக்கு காவல் நிலையம், தெற்கு காவல் நிலையம், சத்துவாச்சாரி, வேலூர் தாலுக்கா, விரிஞ்சிபுரம், பாகாயம், அரியூர், வேப்பங்குப்பம், பள்ளிகொண்டா, அணைக்கட்டு காவல் நிலையம் ஆகிய பகுதியில் இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. எண்-9498109944

News September 3, 2024

வேலூர் மாவட்ட எஸ்பி எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று நடத்திய சோதனையில் 35 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.

News September 3, 2024

வேலூரில் நாளை தடகளப் போட்டிகள் நடைபெறுகிறது

image

வேலூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில், பாகாயம் சிஎம்சி மைதானத்தில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நாளை நடைபெற உள்ளது. இதில், வெற்றி பெறும் மாணவர்கள் வரும் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என வேலுார் மாவட்ட தடகள சங்க தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

News September 3, 2024

வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் Mission Vatsalya வழிகாட்டி நெறிமுறைகளின்படி நிதியாதரவு திட்டத்தின்கீழ் வழங்கப்படும் நிதி ஆதரவுத்தொகை பெறுவதற்கு தகுதி வாய்ந்த நபர்கள் வேலூர் அண்ணா சாலையில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News September 3, 2024

வேலூரில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் இன்று ஒன்பது மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் வேலூரில் இன்று இரவு ஏழு மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழையை பெய்ய வாய்ப்புள்ளதா என கமெண்ட் செய்யவும்.

News September 3, 2024

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்க ஏரிகள் அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக வேலூர் சதுப்பேரி ஊசூர் ஏரி மற்றும் கருகம்புத்தூர் ஏரி, குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரி ஆகிய நீர்நிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.

News September 3, 2024

வேலூரில் விநாயகர் சதுர்த்தி குறித்து முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலையை கரைக்க வேண்டும் எனவும், அனுமதி இல்லாத நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க வேண்டாம் எனவும் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 3, 2024

வேலூர் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ ஊர்திகள் சேவை

image

வேலூர் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் சேவையை 1962 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தில் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி ஆகிய பகுதிகளை தலைமையிடமாக கொண்டு 3 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

News September 3, 2024

வேலூரில் மனு அளித்த உடனே நடவடிக்கை எடுத்த ஆட்சியர்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நேற்று (செப்டம்பர் 2) நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் காதொலி கருவி கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளியின் மனுவினை பரிசீலனை செய்து உடனடியாக காதொலி கருவியை மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News September 2, 2024

வேலூரில் பள்ளி கல்லூரிகளில் பாலியல் பிரச்சனை தடுப்பது குறித்து கூட்டம்

image

தமிழ்நாடு அரசின் அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் இன்று (02.09.2024) பள்ளி, கல்லூரிகளில் பாலியல் பிரச்சினைகளை தடுப்பது குறித்து அனைத்து பள்ளி/ கல்வி நிறுவன முதல்வர்களுடன் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, நேரலையில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!