Vellore

News September 4, 2024

வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி

image

வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று செப்டம்பர்-4 இரவு ரோந்து பணி செல்லும் காவல்துறை காவல் ஆய்வாளர் (சீனிவாசன்) தலைமையில் இன்று இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. இதில் வடக்கு காவல் நிலையம், தெற்கு காவல் நிலையம், சத்துவாச்சாரி, வேலூர் தாலுக்கா, விரிஞ்சிபுரம், பாகாயம், அரியூர், வேப்பங்குப்பம், பள்ளிகொண்டா, அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. தொடர்புக்கு எண்-9498149544

News September 4, 2024

வேலூர் கோவில் கும்பாபிஷேகத்தில் அமைச்சர் பங்கேற்பு

image

வேலூர் கொசப்பேட்டையில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சிவ சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை வகிக்கவுள்ளார். இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

News September 4, 2024

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் இரட்டை பதிவு பணி தொடக்கம்

image

வேலூரில் வாக்காளர் இரட்டை பதிவு, இறப்பு நீக்கம் உள்ளிட்டவை வீடு வீடாக சென்று சரிபார்த்து அக்.29-ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அன்றிலிருந்து சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் நவ.28-ஆம் தேதி வரை பெறப்படும். விண்ணப்பங்கள் வரும் டிச.24-ஆம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு , 6.01.2026-இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News September 4, 2024

வேலூர்மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு கூடுதல் இருக்கை

image

வேலூர் அரசு பென்ட்லேண்ட் பொது மருத்துவமனையில் கலெக்டர் இன்று செப்டம்பர்-4 ஆய்வு செய்தார். பின்னர் புறநோயாளிகள் பிரிவில் பொதுமக்களுக்கு இருக்கை வசதிகள் கூடுதலாக ஏற்பாடு செய்ய மருத்துவ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மகப்பேறு உதவித்தொகை முறையாக வழங்கப்படுகிறதா எனவும், தாய்மார்களிடம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் அட்டவணையின்படி உரிய மாதத்தில் செலுத்திப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார்.

News September 4, 2024

வேலூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர்களுக்கு விருது

image

வேலூர் மாவட்டம் மேல்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வசந்த், பத்தலப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் பாபு, கேவி குப்பம் ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியை மீனாட்சி, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை பூவிழி ஆகியோருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.

News September 4, 2024

வேலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு விருது

image

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கு வேலூர் மாவட்டம் பெண்ணாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவன்,ஊசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை கோட்டீஸ்வரி, கர்ணாம்பட்டு உடற்கல்வி ஆசிரியர் மகேஷ் குமார், பள்ளிகொண்டா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜெயக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நாளை சென்னையில் நடைபெறும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருது வழங்குகிறார்.

News September 4, 2024

வேலூர் சதுப்பேரியில் சிலை கரைக்க கூடுதல் குட்டை அமைப்பு

image

வேலூரில் விநாயகர் சிலையை கரைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சதுப்பேரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி நேற்று (செப்டம்பர் 03) பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிலையை எளிதில் கரைக்கும் வசதியாக கூடுதலாக ஒரு குட்டை அமைத்து தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார். ஊர்வலம் செல்லும் சாலையான சைதாப்பேட்டை பகுதியில் கடையின் முன்பு உள்ள தகர சீட்டுகளை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

News September 4, 2024

வேலூர் அருகே மாமனாருடன் மது குடித்த மருமகன் பலி

image

ஒடுகத்தூர் அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(30). இவரது மாமனார் சம்பத். இருவரும் சேர்த்து உறவினரின் இறுதி சடங்கிற்கு சென்ற நிலையில், சுடுகாட்டில் இரவு 7 மணி அளவில் இருவரும் மது அருந்தியுள்ளனர். சம்பத் அங்கிருந்து சென்று விடவே சீனிவாசன் மறுநாள் காலை அருகில் இருந்த கிணற்றில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 4, 2024

நவராத்திரி கண்காட்சி; வேலூர் ஆட்சியர்  தகவல்

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நவராத்திரியை  முன்னிட்டு சென்னையில் செப்டம்பர் 21 ம் தேதி முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை நடைபெறவுள்ள மாநில அளவிலான கண்காட்சியில் வேலூர் மாவட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பங்கேற்க விரும்பினால் வரும் செப்டம்பர் 10 தேதிக்குள் https://exhibition.mathibazaar.com/login என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News September 4, 2024

விநாயகர் சிலை கரைக்கும் இடத்தை கலெக்டர் ஆய்வு

image

விநாயகர் சதுர்த்தியை விழா முன்னிட்டு விநாயகர் சிலையை கரைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேலூர் சதுப்பேரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி நேற்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஜானகி, வேலூர் வட்டாட்சியர் முரளிதரன், உதவி பொறியாளர் அரசு, செயற்பொறியாளர்கள் செல்வராஜ், பார்வதி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

error: Content is protected !!