India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒடுக்கத்தூர் அருகே பச்சிளம் பெண் குழந்தையை பெற்றோரே கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆண் குழந்தை பிறக்காத ஆத்திரத்தில் எருக்கம் பால் ஊற்றி கொலை செய்ததாக தந்தை ஜீவா வாக்கு மூலம் அளித்துள்ளார். மேலும், ஆண் குழந்தை பிறந்தால் கிடாய் வெட்ட ஆடு ஒன்றை வளர்த்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை பெற்றோரே கொலை செய்து வீட்டின் அருகே புதைத்து விட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய பெற்றோர் ஜீவா, டயானா ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று (செப்டம்பர் 6) அதிகாலை வனப்பகுதியில் பதுங்கி இருந்த ஜீவா, டயானா ஜீவாவின் தாயார் பேபி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
ஒடுக்கத்தூரை பொம்மன்குட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சேட்டு (30) டயானா (20) தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே ஓரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தை இறந்துவிட்டதாக வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர். சதேககம் அடைந்த டயானாவின் தந்தை போலீசில் புகைரளித்துள்ளார். மீண்டும் குழந்தையை தோண்டி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
டாக்டர்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான நேற்று அவர் நினைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அவரை கௌரவிக்கும் வண்ணமாக ஆண்டுதோறும் மாநில அரசு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் குடியாத்தம் சார்ந்த ஆசிரியர் கோபிநாத் அவர்கள் இந்திய ஜனாதிபதியிடம் நேற்று நல்லாசிரியர் விருது பெற்று வேலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகையான கல்லூரி படிப்புகளுக்கு சிறப்பு கல்வி கடன் வழங்கப்படவுள்ளது. இம்முகாம் குடியாத்தம் கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை (செப்டம்பர் 6) நடைபெறவுள்ளது. எனவே இந்த முகாமை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா என்பதை தெரிவிக்கவும்.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்ப்பள்ளிப்பட்டு கிராமத்தில் வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழ்நாடு அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று (செப்டம்பர் 5) ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக பாகாயம் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போதை மாத்திரைகளை பைக்கில் எடுத்து சென்ற ஒல்டுடவுன் பகுதியை சேர்ந்த கிஷோர் குமார், அபிஷேக், பூபாலன் விக்னேஷ் சிவகுமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
வேலூர் புதிய பஸ் நிலையத்தின் வழியாக படுக்கை வசதி கொண்ட 15 அதிநவீன் சொகுசு பஸ்கள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 150 புதிய பஸ் சேவைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் 90 கோடி 52 லட்ச ரூபாய் செலவில் 150 பிஎஸ் 6 ரக பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வேலூர் புதிய பஸ் நிலையத்தின் வழியாக 15 அதிநவீன சொகுசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தால் பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதில் சேர மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலத்தை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் நேரில் அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.