Vellore

News September 7, 2024

வேலூரில் யுபிஎஸ்சி தேர்வுக்கு‌ பயிற்சி

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் UPSC – 2025 தேர்வுக்கு தாட்கோ மூலம் பயிற்சிக்கு www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி நேற்று (செப்டம்பர் 6) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

News September 7, 2024

சலவைத்தொழில் தேய்ப்பு பெட்டிகள் பெற விண்ணப்பம்

image

வேலூர் மாவட்டத்தில் சலவைத் தொழிலை மேற்கொள்ளும் குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்குள் உள்ள ஏழை எளிய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்கள் திரவ பெட்ரோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகளை பெறுவதற்கான விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News September 7, 2024

வேலூர் விநாயகர் விஜர்சன ஊர்வலம் எஸ்பி ஆய்வு

image

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் வரும் (செப்டம்பர் 9) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் தயார் நிலை குறித்தும், பாதுகாப்பு உபகரணங்களான HELMET, SHIELD, BODY PROTECTOR, GAS GUN LATHI, ROPE ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் நேற்று வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News September 7, 2024

வேலூர் கைவினைஞர் பயிற்சி குறித்து கலெக்டர் தகவல்

image

2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் (NCEVT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி நேற்று (செப்டம்பர் 6) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News September 7, 2024

வேலூர் மாவட்டத்தில் 37 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (செப்டம்பர் 6) நடத்திய சோதனையில் 37 மதுபாட்டில்கள் மற்றும் 300 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 5 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.

News September 6, 2024

வேலூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

image

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் 1 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 7 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 1072 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினார்கள், 70 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் மற்றும் 150 ஊர்காவல் படையினர் ஆகியோர் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என மாவட்ட காவல் துறையினர் தெரிவித்தனர்.

News September 6, 2024

பச்சிளம் குழந்தை கொலை: தந்தையிடம் போலீசார் விசாரணை

image

வேலூர் ஒடுக்கத்தூர் அருகே பச்சிளம் பெண் குழந்தையை கொலை செய்த தந்தை ஜீவாவை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அப்போது எருக்கன் செடியில் இருந்து பால் எடுத்தது குழந்தைக்கு ஊற்றி கொடுத்தது எப்படி என ஜீவா செய்து காட்டினார். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தற்போது கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.

News September 6, 2024

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலூர் மாவட்ட பிரிவு 2024- 25 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் மாவட்ட அளவிலான 5 பிரிவுகளின் கீழ் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு. அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து பிரிவினர்களுக்கும் 10.09.2024 முதல் 26.09.2024 வரை மாவட்ட விளையாட்டு அரங்கம் காட்பாடியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

வேலூரில் திருமண மாப்பிள்ளை அதிரடி கைது

image

வேலூர் மாவட்டத்தில் போதை மாத்திரை விற்பனை செய்த வழக்கில் பாகாயம் போலீசாரால் கடந்த 4-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளி உள்பட மேலும் 3 பேரை தேடி வந்தனர். இதில் பள்ளிகொண்டாவை சேர்ந்த அபிஷேக்(24), ரவிக்குமார்(25), விமல்(24) ஆகிய 3 பேரையும் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் நேற்று கைது செய்தனர்.அபிஷேக் என்பவருக்கு இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் கைதாகியுள்ளார்.

News September 6, 2024

பெண் சிசு கொலை: அமைச்சர் கீதா ஜிவன் வருத்தம்

image

ஒடுக்கத்தூரில் நடந்த பெண் சிசுக்கொலை குறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில், இது போன்ற நிகழ்வுகள் மிகவும் வருத்தம் அளிக்கின்றன. சமூக நலத்துறை மூலம் பெண்களை காப்போம், கற்பிப்போம் என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இப்படி ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. குழந்தைகளை வளர்க்க முடியாத பெற்றோர்கள், சமூக நலத்துறையிடம் ஒப்படைத்திருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!