India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக முழுவதும் இன்று நடைபெற்ற குரூப் 2 முதல் நிலைத் தேர்வு 2127 இடத்திற்கு. 7.93 லட்சம் பேர் தேர்வு எழுதினார், அதில். வேலூர் மாவட்டத்தில் இன்று நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2A ஆகிய தேர்வுகளில் பங்கேற்க 13,139 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, அவர்களில் 9,675 பேர் இன்று தேர்வு எழுதினர், 3464 பேர் தேர்வு எழுத வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று (செப்டம்பர் 14) நடந்தது. வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 48 மையங்களில் குரூப்2, குரூப் 2ஏ தேர்வை 13139 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 9675 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மீதமுள்ள 3464 தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் சிறையில் புதிய கண்காணிப்பாளர் டிஐஜி முருகேசன் புதிதாக பதவி ஏற்றுக்கொண்டார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் என்பவரை சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி வீட்டு வேலையில் ஈடுபடுத்தி ரூ. 4.25 லட்சம் திருடியதாக கூறி அவரை தனி அறையில் வைத்து தாக்கப்பட்டதாக கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் உட்பட 14 பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரிந்து வரும் 20 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதைத்தவிர 7 ஊராட்சி ஒன்றிய உதவியாளர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் சுப்புலெட்சுமி பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று (செப்டம்பர் 14) நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 48 மையங்களில் இந்த தேர்வை 13,139 பேர் எழுத உள்ளனர் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு ஆகியவைகள் மேற்கொள்ளப்படும். எனவே முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று நடத்திய சோதனையில் 78 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மகளிர் அதிகாரம் மையம், பள்ளி கல்வித்துறை இணைந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பார்வையிடுவதற்காக விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
காட்பாடி தெற்கு பகுதி திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் துணைமேயர் சுனில்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசும் போது, அமெரிக்காவில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் வந்தவுடன் கட்சியில் மாற்றம் செய்ய வேண்டும், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று பேசினார்.
வேலூர் மாநகராட்சியில் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்த வருவாய் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் உட்பட 23 பேர் வெவ்வேறு மண்டலங்களுக்கும், மாநகராட்சிக்கும் பணியிடமாற்றம் செய்து கமிஷனர் ஜானகி உத்தரவிட்டுள்ளார். மேலும், உடனடியாக இந்த பணியிடத்திற்கு சென்று பொறுப்பேற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. .
Sorry, no posts matched your criteria.