Vellore

News October 30, 2024

வேலூர் சிறையில் 26 பேருக்கு பரோல் வழங்கப்பட்டது

image

தமிழக சிறைகளில் நீண்ட காலம் தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகள் தீபாவளி பண்டிகையை தங்களின் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் இருந்து நன்னடத்தை சிறைவாசிகள் 26 பேருக்கு 3 முதல் 6 நாட்கள் வரை பரோல் வழங்கப்பட்டுள்ளது என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 30, 2024

வேலூர் மாவட்டம் 54 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (அக்டோபர் 29) நடத்திய சோதனையில் 54 மது பாட்டில்கள், 32 கிலோ குட்கா பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

News October 29, 2024

வேலூர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட ஆட்சியர்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான சுப்புலட்சுமி இன்று (அக்டோபர் 29) ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் தேர்தல் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News October 29, 2024

வேலூர் சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

image

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது தீவிரமாக கவனிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News October 29, 2024

வேலூர் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

image

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வேலூர் மாவட்டத்தில் சிறப்பு சுருக்க திருத்தம் பணிகள் 2025 வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான சுப்புலெட்சுமி இன்று பிற்பகல் 3 மணியளவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினர் முன்னிலையில் வெளியிட உள்ளார் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 29, 2024

வேலூர் ஆட்சியர் மக்களிடம் வேண்டுகோள்

image

மருத்துவமனைகள், பள்ளிகள், கோர்ட், வழிபாட்டுத் தலங்கள் போன்ற அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றிக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிக்க கூடாது உள்ளிட்டவற்றை வழிமுறைகளை கடைப்பிடித்து, பொதுமக்கள் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என வேலூர் மாவட்டம் ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News October 29, 2024

வேலூர் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு

image

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வேலூர் மாவட்டத்தில் சிறப்பு சுருக்க திருத்தம் பணிகள் 2025 வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான சுப்புலெட்சுமி நாளை  பிற்பகல் 3 மணியளவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினர் முன்னிலையில் வெளியிட உள்ளார் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 28, 2024

வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தீபாவளி பண்டிகை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் பயனாளிகள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட நியாய விலைக் கடைகளில் அக்டோபர் 29-ம் தேதி முதல் இலவச வேட்டி, சேலை பெற்று பயனடையுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News October 28, 2024

வேலூர் உள் விளையாட்டு அரங்கம் திறப்பு விழா

image

வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசினர் பொறியியற் கல்லூரியில் 8.65 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கத்தை நாளை (அக்டோபர் 29) காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வைக்க உள்ளார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 28, 2024

ராமநாதபுரம் விரைந்த வேலூர் போலீசார்

image

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக வேலூர் மாவட்டத்தில் இருந்து எஸ்பி மதிவாணன் தலைமையில் 1 ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 7 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 250 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று (அக்டோபர் 28) புறப்பட்டு சென்றனர். என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!