India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேட்டூர் தலைமை நீர் ஏற்றும் நிலையம் மற்றும் பொம்மிடி பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வரும் நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்களுக்கு வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வழங்க இயலாது. உள்ளூர் குடிநீர் ஆதாரத்தை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (நவம்பர் 10) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையொட்டி தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை அக் 28 ஆம் தேதி முதல் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டம் கற்பகம் சிறப்பு அங்காடியில் ₹85 லட்சத்திற்கு பட்டாசுகளும், ₹2 லட்சத்துக்கு சிறப்பு தொகுப்பும் என மொத்தம் ₹87 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் கோட்டை அகழி நீர் கடந்த சில நாட்களாக அடிக்கடி நிறம் மாறியது. இது தொடர்பாக இந்திய தொல்லியல் துறையினர், தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் மூலம் தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் கோட்டை அகழி தண்ணீரில் ரசாயனம் கலந்துள்ளது. அமோனியம், நைட்ரேட் மற்றும் பாஸ்பேட் ஆகியவை அதிகளவு உள்ளது. இதுவே தண்ணீர் நிறம் மாறுவதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
பொது விநியோக திட்டத்தின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் வழங்கும் விதமாக வேலூர் மாவட்டத்தில் தாலுகா வாரியாக பொதுவிநியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நேற்று நடந்தது. மாவட்டம் முழுவதும் நடந்த இந்த சிறப்பு குறைதீர்வு முகாமில் மொத்தம் 186 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூரில் 3 மையங்களில் டிஎன்பிஎஸ்சி சார்பில் நடந்த தொழில் நுட்ப தேர்வை 400 பேர் எழுதினர். 350 பேர் தேர்வு எழுத வரவில்லை. மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு 2), டிராப்ட்ஸ்மேன் (கிரேடு 2), இளநிலை வரைவு அலுவலர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், உள்ளிட்ட டிப்ளமா மற்றும் ஐடிஐ கல்வித்தகுதி கொண்ட பதவிகளில் 861 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி வெளியிட்டது.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (நவம்பர் 9) நடத்திய சோதனையில் 58 மது பாட்டில்கள், 100 கிராம் கஞ்சா, 150 கிராம் குட்கா பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக 5 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (நவம்பர் 9) கே.வி. குப்பம் வட்டம், லத்தேரி- திருமேனி இடையே ரயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கே.வி. குப்பம் ஒன்றிய குழுத்தலைவர் ரவிசந்திரன், வட்டாட்சியர் சந்தோஷ்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயா முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் பயன்பெறும் குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (நவ.9) லத்தேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்தி பிரியதர்ஷினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வுகள் இன்று (நவம்பர் 9) நடந்தது. இதில் வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள அரசினர் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.