Vellore

News October 24, 2024

வேலூர் காவல் துறை சார்பில் புதிய முயற்சி

image

வேலூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் முதல் ஆளிநர்கள் வரை, தங்களின் குறைகளை 90927 00100 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பதிவிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு தெரிவிக்கப்படும் தகவல்கள் அனைத்தும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக தீர்வு காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

News October 24, 2024

காட்பாடியில் நாளை குட்டி முருகன் சொற்பொழிவு

image

காட்பாடி காங்கேயநல்லூரில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 31 ஆம் ஆண்டு குருபூஜை நாளை(அக்.25) நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாட்டில் முருகர் பாடல்களை பாடி அசத்திய குட்டி முருகன் என்று அழைக்கப்படும் தியாவின் இசை சொற்பொழிவு நாளை காலை 9 மணிக்கு காங்கேயநல்லூர் வாரியார் ஞானத்திரு வளாகத்தில் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.

News October 24, 2024

வேலூர் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் 2வது முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் அமைப்பதற்கான சங்க உறுப்பினர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுடைய நபர்களின் பெயர், முகவரி, கல்வித்தகுதி மற்றும் ஏற்கனவே மேற்கொண்ட சமூக தொண்டுகள் ஆகிய விவரங்களுடன் நவம்பர் 7-ம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News October 24, 2024

வேலூர் மாவட்டத்தில் 14 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்

image

வேலூர் மாவட்டத்தில் 14 துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார். அதன்படி மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் துணை தாசில்தாராக இருந்த குமார் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்துக்கும், ஆட்சியர்  அலுவலகம் தலைமை உதவியாளர் நதியா மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக கண்காணிப்பாளராகவும் இவர்கள் உள்பட மொத்தம் 14 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News October 24, 2024

வேலூர் காவல் துறை சார்பில் பட்டாசு விற்பனை

image

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனையை நேற்று (அக்டோபர் 23) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர் பிருத்விராஜ் சவுகான் உள்ளிட்ட காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News October 23, 2024

வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அக்.23 இரவு ரோந்து பணி செல்லும் காவல்துறை காவல் ஆய்வாளர் (காஞ்சனா) தலைமையில் இன்று இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. இதில் வடக்கு காவல் நிலையம், தெற்கு காவல் நிலையம், சத்துவாச்சாரி, வேலூர் தாலுக்கா, விரிஞ்சிபுரம், பாகாயம்,அரியூர்,வேப்பங்குப்பம், பள்ளிகொண்டா, அணைக்கட்டு காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. எண்-9789837935

News October 23, 2024

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று நடத்திய சோதனையில் 95 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.

News October 23, 2024

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எதிரான வன்கொடுமைகள் குறித்த புகார் அளிக்க 18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் அரசு விடுமுறை நாட்கள் நீங்களாக அலுவலக நாட்களில் அலுவலக பணிநேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (அக்டோபர் 23) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News October 23, 2024

விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் தகவல்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் வருகிற அக்டோபர் 25-ம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களாக வழங்கலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News October 23, 2024

வேலூரில் பட்டாசு விற்பனையை தொடங்கி வைத்த ஆட்சியர்

image

வேலூர் அண்ணா சாலையில் உள்ள கற்பகம் கூட்டுறவு அங்காடியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசுகளின் முதல் விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (அக்டோபர் 23) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், கூட்டுறவு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!