India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <

கோவில்பட்டி அருகே கடலையூர் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜ் (60) என்பவர் கடந்த சில மாதங்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். மேலும் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்று வந்தும் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மளவர்நத்தத்தை சேர்ந்தவர் பொன இசக்கி. இவர் இவரது மனைவியை 2013-ல் வெட்டி கொலை செய்தார். இதற்கு பழிக்கு பலியாக கடந்த 2014-ல் பொன் இசக்கி மனைவியின் சகோதரர்களான கால்வாயை சேர்ந்த முருகன், சங்கரன் சேர்ந்து பொன் இசக்கி, அவரது தந்தை நங்கமுத்துவை வெட்டி கொலை செய்தனர். இது சம்பந்தமான வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் முருகன், சங்கரனுக்கு இரட்டை ஆயுள் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஆதித் தமிழர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு தொழில் ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பயிற் பெற விரும்பும் இளைஞர்கள் தாட்கோ இணையதளம் முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. தூத்துக்குடி மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய <

தூத்துக்குடி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே கிளிக் செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 30 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பகுதியில் குறிப்பாக கொலை சம்பவங்கள் பரும அளவுக்கு அதிகரித்து வருகிறதாகவும், இவற்றில் பெரும்பாலானவை போதையில் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடியில் ஜன.மாதம் 13 கொலையும், பிப்.மாதம் 12 கொலையும் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு அலுவலக உலகத்திலுள்ள கிளை சிறையில் நேற்று (மார்ச்.05) பெண்ணை தாக்கிய வழக்கில் கைதான நிரஞ்சன் என்ற கைதி தப்பி ஓடி உள்ளார். இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் கிழக்கு காவல் நிலைய போலீசார் தப்பி ஓடிய கைதியை தேடி வருகின்றனர். மேலும் சிறைத் துறை அதிகாரிகள் கிளை சிறையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.