India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தூத்துக்குடி மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தலைவர் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 6 அமர்வுகளும், கோவில்பட்டியில் 2 அமர்வுகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 அமர்வுகளும், திருச்செந்தூர்ல் 2 அமர்வுகளும், விளாத்திகுளம், சாத்தான்குளம் மற்றும் ஓட்டப்பிடாரம் தாலுகாவில் தலா ஒரு அமர்வு உட்பட 15 அமர்வுகளில் நடைபெற உள்ளது.

தூத்துக்குடியில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் சல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது <

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

தூத்துக்குடி மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <

தூத்துக்குடி மக்களே, உங்க வங்கில Balance பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே வங்கிக்கும் இல்ல அடிக்கடி UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை.
Indian bank : 87544 24242
SBI: 90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 1800 1030
உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் 209 உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் அனைவரும் சமீபத்தில் தான் வேறு மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இவர்கள் திடீரென மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அறிந்த தென் மண்டல ஐஜி இந்த பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்து அதை இடத்தில் பணிபுரிய உத்தரவிட்டார்.

தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சார்பில் பைபர் wi-fi இன்டர்நெட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் மாதம் ஒன்றுக்கு 50 mbps இணைய வேகத்தில் 3300 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதில் முதல் 12 மாதங்களுக்கு மாதத்திற்கு 50 ரூபாய் தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டுள்ளது என பிஎஸ்என்எல் வணிகப்பகுதி முதன்மை பொது மேலாளர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி இன்று தூத்துக்குடிக்கு வருகை தர உள்ளார். அதன்படி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் அரசு விழா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் ஆகியவைகளில் கலந்து கொள்ள உள்ளார். இந்நிகழ்வில் எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

கோவில்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் அப்பகுதியில் 4 பேர் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சேதுபதி (22), பாலமுருகன்(23) மற்றும் 2 சிறார்கள் என 4 பேர் என தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.