Tuticorin

News March 4, 2025

தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்றைய (4) நிகழ்ச்சிகள்

image

தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று (4) காலை 10 மணிக்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் கொடுக்காம் பாறை, கிழவிப்பட்டி ஆகிய பகுதிகளில் கட்டப்படவுள்ள சமுதாய நலக் கூடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 11 மணிக்கு கீழ பாண்டவர் மங்கலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தையும் அதன்பின் நாலாட்டின் புதூரில் புதிய நியாயவிலைக் கடை கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 4, 2025

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து பணிகள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூர் மற்றும் மணியாச்சி ஆகிய பகுதிகளில் இன்று 03.03.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரத்திற்கு 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News March 3, 2025

தூத்துக்குடி துறைமுகத்தில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசிகள்

image

ஆப்பிரிக்கா தென் அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு, தூத்துக்குடி துறைமுகத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசிகள் ஆப்பிரிக்கா தென் அமெரிக்காவிற்கு செல்வோர்கள் அங்கிருந்து வருபவர்களுக்கு வழங்கப்படுகிறது. ரூபாய் 300 கட்டணமாக செலுத்தி துறைமுக சுகாதார அதிகாரிகளிடம் இதனை பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News March 3, 2025

தூத்துக்குடி இளைஞர்களுக்கு வாய்ப்பு

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் முன்னணி நிறுவனங்களில் ஊக்கத் தொகையுடன் பாரத பிரதமரின் இன்டர்ன்ஷீப் தொழில் பயிற்சி பெறுவதற்கான வேலை வாய்ப்பு பதிவு செய்யும் முகாம் இம்மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. கோரம்பள்ளத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் இந்த முகாமை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடிஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.*நண்பர்களுக்கு பகிரவும்*

News March 3, 2025

தூத்துக்குடி விவசாயிகளுக்கு..மார்ச் 15 வரை அவகாசம்!

image

தூத்துக்குடி மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் அலுவலகம் நேற்று(மார்ச் 2) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடமைகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 42,174 விவசாயிகளின் நில உடமை மட்டுமே வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யாதோர் மார்ச் 15க்குள் பதிவு செய்திடுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News March 3, 2025

TUTICORIN – பெயர் மாற்றப்படுமா?

image

தமிழகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு ஆங்கில உச்சரிப்பு கொண்ட ஊர் பெயர்களை தமிழில் உச்சரிப்புக்கு ஏற்றபடி மாற்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடியின் ஆங்கில பெயர் ‘TUTICORIN’ என்பது ‘THOOTHUKUDI-‘ஆக பெயர் மாற்றப்பட்டுள்ளது. எனினும் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான நிலையத்தில் பழைய பெயர்தான் பொறிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

News March 3, 2025

கனிமொழி எம்பி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்

image

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று (3)பரிவள்ளிக்கோட்டை பஞ்சாயத்து கள்ளத்தி கிணறில் காலை 10:30 மணிக்கு 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயநல கூட்டத்தை திறந்து வைக்கிறார். அதன் பின் அங்குள்ள பொது விநியோக கூடம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ள உணவு கூடம் போன்றவைகளையும் அவர் திறந்து வைக்க உள்ளார்.

News March 3, 2025

தூத்துக்குடி: பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் மரணம்

image

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை வேலாயுதபுரத்தைச் சேர்ந்த பல்க் உரிமையாளர், தொழிலதிபர் மற்றும் பாஜகவின் மாநில பொதுக்குழு உறுப்பினர் P. போஸ் (02.03.2025) நேற்று இயற்கை எய்தினார். பாஜக சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் மற்றும் துணைத் தலைவர் என கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

News March 3, 2025

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (மார்ச்.02) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 0461-2340393 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 9514144100 எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 2, 2025

இன்று முதல் திமுக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

image

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர்/அமைச்சர் கீதா ஜீவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,“தமிழக முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது; இன்று கயத்தாரில்,  நாளை கடம்பூரில், 4 ம் தேதி தூத்துக்குடி, 5ம் தேதி கழுகுமலையில், 6ம் தேதி விளாத்திகுளம் கிழக்கில் நடைபெற உள்ளது” என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!