India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி – பாலக்காடு, எர்ணாகுளம் ரயிலில் உள்ளிட்ட தென்னக ரயில்வேயின் 35 முக்கிய விரைவு ரயில்களில் டி ரிசர்வ் டிக்கெட் வசதி உள்ளது. இதன் மூலம் காலியாக செல்லும் படுக்கை பெட்டியில் பயணிக்க வசதி கிடைக்கிறது. இந்த வசதியை விரைவில் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிக்கு விரிவுபடுத்த வாய்ப்பு உள்ளதாக தென்னக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. எல்லோரும் தெரிந்து கொள்ள மறக்காம ஷேர் பண்ணுங்க
தூத்துக்குடியில் மண்டல துணை தாசில்தாராக பணியாற்றிய ரமேஷ் இஸ்ரோ நிலம் எடுப்பு பிரிவு தாசில்தாராகவும், திருச்செந்தூர் மண்டல துணை தாசில்தார் சிவகுமார் திருச்செந்தூர் ஆதிதிராவிட நல தாசில்தாராகவும், ஸ்ரீவை., தாலுகா மண்டல துணை தாசில்தார் பாண்டியராஜன் தூத்துக்குடி அறநிலையத்துறை அலுவலக தாசில்தாராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவுகளை நேற்று(மார்ச் 6) கலெக்டர் இளம் பகவத் வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் medical officer, RMNCH counsellor என 2 காலியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. தகுதியான நபர்களுக்கு ரூ.18,000-ரூ. 60,000 வரை சம்பளம் கிடைக்கும். கூடுதல் தகவலுக்கு <
தமிழகத்தில் கடந்த 3ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்கிய நிலையில், இன்று(மார்ச் 5) பிளஸ் 1 தேர்வு துவங்கியுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 90 மையங்களில், 19,760 மாணவர்கள் பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுகளை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் நலன் கருதி தமிழகம் முழுவதும் கடந்த 24ஆம் தேதி முதல்வர் மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் 3 இடங்களில் இந்த மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அனைத்து மருந்துகளும் 25% தள்ளுபடியில் கிடைப்பதுடன், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கான மாத்திரைகள் மிகக் குறைந்த விலையில் கிடைப்பதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் கீதா ஜீவன் வேண்டியுள்ளார்.
கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் குறித்த திறமைகளை காட்ட பொதுமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ‘சைபர் ஹாக்கத்தான்’ போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என மாவட்ட காவல்துறை நேற்று(மார்ச் 4) அறிவித்துள்ளது. இதற்காக ‘QR code’ அல்லது ‘LINK’ மூலம் விண்ணப்ப செய்ய மார்ச் 9ஆம் தேதிதான் கடைசி நாளாகும். SHARE IT.
நாசரேத்தில் உள்ள தூய யோவான் மகளிர் மேல்நிலைப்பள்ளிதான் தென்னிந்தியாவில் பெண்களுக்காக துவங்கப்பட்ட முதல் பள்ளியாகும். இந்திய அளவில் துவங்கப்பட்ட 3வது பெண்கள் பள்ளி. 1820ஆம் ஆண்டு அருள் திரு ஹோக் என்பவர் இந்த பள்ளியை துவங்கினார். 1877 ஆம் ஆண்டு இந்த பள்ளியில் பெண்களுக்கான ஆசிரியர் பயிற்சி பள்ளியும் நிறுவப்பட்டது. பெண் கல்வியின் அவசியத்தை தமிழகத்திற்கு உணர்த்திய பெருமை இப் பள்ளிக்கு உண்டு. SHARE IT.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு-நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது.அந்த வகையில் நாளை (5) நடைபெற உள்ள குறை தீர் கூட்டத்தில் காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் புகார்கள் திடர்பாக மனு அளிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.