Tuticorin

News April 28, 2025

சமூக வலைதள லிங்குகள் காவல்துறையை எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துள்ளன, இந்நிலையில் கோரம்பள்ளத்தில் உள்ள எஸ்பி அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிவிப்பில், சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் ஆப்களின் லிங்குகளை தேவையில்லாமல் பதிவிறக்கம் செய்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என எச்சரித்துள்ளது.

News April 28, 2025

காதலிக்கு  நிச்சயமானதால் மாணவர் தற்கொலை

image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரை சேர்ந்த தனலட்சுமி – அர்ச்சுனன் தம்பதியரின் மகன் சரவணகுமார் (18) என்பவர் கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவர் காதலித்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயமான விரக்தியில் கடந்த சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 27, 2025

பெண்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் பனை ஓலை பொருட்கள்

image

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை கிராமமான மணப்பாட்டில் பனை மரங்கள் அதிகம் உள்ளன. இந்த மரங்களில் உள்ள குருத்து ஓலைகளை பயன்படுத்தி பெண்கள் கூடை, பூக்கள் விசிறி, கீ செயின், கிரீடம் போன்ற பல்வேறு பொருட்கள் தயாரித்து வருகின்றனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக உள்ள இந்த வகை பொருட்கள் இங்குள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது .மேலும் பெண்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.

News April 27, 2025

16 ஆயிரத்து 14 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா

image

தூத்துக்குடியில், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 16 ஆயிரத்து 14 பயனாளிகளுக்கு ரூபாய் 47கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

News April 27, 2025

ஆக்கி போட்டிக்கு அணி தேர்வு

image

மாநில சீனியர் ஆண்கள் சாம்பியன் போட்டி கோவில்பட்டியில் மே 10 முதல் 14 வரை போட்டிகள் நடைபெற உள்ளன. தூத்துக்குடி மாவட்ட அணிகளில் கலந்து விளையாட பெண்கள் அணி வரும் ஏப்.29 அன்று காலை 7 மணி அளவில் கோவில்பட்டி வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் வைத்து மாவட்ட அணி தேர்வு நடைபெற இருக்கிறது. கலந்து கொள்ள விருப்பமுள்ளோர் கீழ்க்கண்ட 9443190781 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 27, 2025

தூத்துக்குடி: முக்கிய அரசு அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

image

தூத்துக்குடி மாவட்ட முக்கிய அரசு அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
▶️மாவட்ட ஆட்சியர் – 0461-2340601
▶️மாவட்ட வருவாய் அலுவலர் – 0461-2340400
▶️திட்ட அலுவலர் – 0461-2340575
▶️சார் ஆட்சியர், தூத்துக்குடி – 0461-2320400
▶️வருவாய் கோட்டாட்சியர், திருச்செந்தூர் – 04639-245165
▶️காவல் கண்காணிப்பாளர் – 0461-2340200
▶️துணை காவல் கண்காணிப்பாளர் – 0461-2340200
இது போன்ற முக்கிய தொடர்பு எண்களை ஷேர் செய்யவும்

News April 27, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

image

தென் வங்கக்கடலில் புதிய காற்று சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக சிவஞானபுரம் 29.2 மிமீ மழையும், சோழபுரம் 13.6 மிமீ மழையும், காடல்குடி 12.4 மிமீ மழையும் பதிவாகியுள்ளது, என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 26, 2025

தூத்துக்குடி: லேசான மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தூத்துக்குடி,குமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. *உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்*

News April 26, 2025

தூத்துக்குடி அருகே புதிய காற்றழுத்த சுழற்சி

image

தமிழகத்தில் தென் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டி உள்ள தூத்துக்குடி கடல் பகுதியில் புதிய காற்றழுத்த சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று உங்கள் பகுதியில் மழையை எதிர்பார்க்கலாம். இந்த தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்புங்கள்.

News April 26, 2025

ரயில்வே துறைக்கு தூத்துக்குடி எம்பி கோரிக்கை

image

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளுக்கு நாள் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் பகுதிக்கு சென்னையிலிருந்து சிதம்பரம் வழியாக ரயில் வருகிறது. எனவே இதனால் பக்தர்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே நேர்வழியில் புதிதாக ரயிலை இயக்க வேண்டும் என தூத்துக்குடி எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!