Tuticorin

News April 5, 2025

குழந்தைத் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரை எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்தவோ 18 வயது வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான பணியில் அமர்த்தவோ கூடாது என்றும், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு 20,000 முதல் 50,000 வரை அபராதம் விதிக்கப்படுவது உடன், 6 மாத முதல் 2 ஆண்டு வரை சிறைத் தண்டனைக்கும் வாய்ப்புள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

News April 5, 2025

தூத்துக்குடி: பூட்டிய வீட்டில் நகை திருட்டு

image

தூத்துக்குடி சோட்டையன்தோப்பு குமரன் நகரை சேர்ந்தவர் ரத்தினம் (66).இவர் மார்ச் 23ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தஞ்சாவூருக்கு சென்றார். நேற்று வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த 3 பவுன் நகை திருடு போயிருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்ததில் சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்த முருகன்(31) நகையைத் திருடியது தெரிய வந்தது. முருகனை கைது செய்து போலீசார் நகையை மீட்டனர்.

News April 5, 2025

தூத்துக்குடி உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

image

தூத்துக்குடியில் தென்பாகம் உதவி ஆய்வாளர் முத்தமிழ் என்பவர் வழக்கறிஞரை ஒருமையில் பேசியதாக வழக்கறிஞர்கள் கடந்த இரு தினங்களாக போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் இன்று ஆர்ப்பாட்டமும் நடந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் இன்று புகாருக்கு உள்ளான உதவி ஆய்வாளர் முத்தமிழ் அரசன் என்பவரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

News April 5, 2025

தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை 

image

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2024-25 நிதியாண்டில் சரக்கு கையாளுவதில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்ததில் பெரு மகிழ்ச்சி கொள்கிறது. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2024-25 நிதியாண்டில் 41.72 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு இதற்கு முந்தைய நிதியாண்டு கையாண்ட அளவான 41.40 மில்லியன் டன் சரக்குகளை விட அதிகமாக கையாண்டு 0.77 சதவிகிதம் வளர்ச்சி கண்டு சாதனை படைத்துள்ளது.

News April 4, 2025

மீனவர்களுக்கு செயற்கைக்கோள் அலைபேசி

image

கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மீனவர் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், தருவைகுளம் சேர்ந்த 25 விசைப்படகு மீனவர்களுக்கு செயற்கைக்கோள் அலைபேசி கருவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கடலோர காவல் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News April 4, 2025

இந்த ஆலயத்தின் அன்னாபிஷேகம் சாப்பிட்டால் மகப்பேறு!

image

கோவில்பட்டி சொர்ணமலையில் அமைந்தது சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில். மற்ற முருகன் ஆலயங்களை போல் இல்லாமல் இந்த ஆலயத்தில் மூலவராக வேல் வைத்து வழிபாடு செய்கின்றனர். இந்த ஆலயத்தில் கிருத்திகை நட்சத்திர நாளன்று மூலவரான வேலுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். இந்த அண்ணா அபிஷேகத்தை க்கு ஏங்குபவர்கள் சாப்பிட்டால் ஒரு வருடத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை

News April 4, 2025

மூன்று அணிகளாக த.வெ.க வினர் ஆர்ப்பாட்டம்

image

வக்பு வாரிய சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று தூத்துக்குடியில் த.வெ.க பொறுப்பாளர் அஜிதா தலைமையில் முதலில் ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின் அதே இடத்தில தவெக பிரமுகர் எஸ்.டி.ஆர் சாமுவேல் ராஜ் அணியினரும், அதனையடுத்து முருகன் அணியினர் என மூன்று அணியினர் இன்று தனித்தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

News April 4, 2025

செண்பகவல்லியம்மன் கோவில் நாளை கொடியேற்றம்

image

கோவில்பட்டியில் உள்ள அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா நாளை (ஏப்.5) காலை கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடைபெறுகிறது. அதன் பின் 7 மணியிலிருந்து 8 மணிக்குள் கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 4, 2025

தூத்துக்குடியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று (ஏப்.4) தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 4, 2025

சமையல் எரிவாயு குறைதீர்ப்பு கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதந்தோறும் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதம் ஒன்பதாம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!