Tuticorin

News October 13, 2024

கைப்பந்து தூத்துக்குடி மாணவர்கள் வெண்கலம்

image

சென்னையில் முதலமைச்சர் கோப்பை காண மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மாணவர்களுக்கான கைப்பந்து போட்டியில் தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள் அணி வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளது. இவர்களுக்கு சான்றிதழ், பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

News October 12, 2024

தூத்துக்குடி இரவு ரோந்து பணி அதிகாரிகள் நியமனம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு விளாத்திகுளம், சாத்தான்குளம், திருச்செந்தூர், கோவில்பட்டி, திருவைகுண்டம் ஆகிய பகுதிகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 12, 2024

சூரசம்காரம் தென் மண்டல காவல்துறை தலைவர் ஆய்வு

image

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசராதிருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நள்ளிரவு கோவில் கடற்கரை திடலில் நடைபெற உள்ளது. கோவில் கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். இந்நிலையில் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் வசதிக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை, தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சிங்கா இரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News October 12, 2024

ரயில் விபத்து – கனிமொழி எம்பி ஆறுதல்

image

தூத்துக்குடி எம்பி கனிமொழி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது; கவரப்பேட்டையில் நிகழ்ந்ந மைசூர் – தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்த செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். விபத்து நிகழ்ந்த பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் மீட்புப் பணிகளை முதலமைச்சர் துரிதப்படுத்தியுள்ளார். விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

News October 12, 2024

தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று கனமழை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (அக்.12) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மழையால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன் பாதுகாப்புடன் செல்வது நல்லது. SHARE IT.

News October 12, 2024

தூத்துக்குடி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (அக்.11) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

News October 11, 2024

தூத்துக்குடியில் ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்தல் – கைது

image

தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் வெள்ளப்பட்டி அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த வேனை சோதனை செய்ததில் சுமார் 1000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடத்தப்பட்ட 1000 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட பண்டாரம்பட்டியைச் சேர்ந்த டிரைவர் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

News October 11, 2024

பைக் ஷோரூம் பில் மோசடியில் மூன்று ஆண்டு சிறை

image

தூத்துக்குடி சிதம்பரம் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். இருசக்கர வாகன ஷோரூம் நடத்தி வருகிறார். இவரது ஷோரூமில் பணி புரிந்த எழில் நகர் குரு ராஜ் என்பவர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு தினமும் ஆன்லைன் மூலம் கட்ட வேண்டிய ரூ.4 லட்சத்தை மோசடி செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குருராஜுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

News October 11, 2024

வேட்டையன் பட இயக்குனர் மீது போலீசில் புகார்

image

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த வேட்டையன் படத்தில் கோவில்பட்டி காந்தி நகர் அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியை ஒருவரை ஆபாசமாக திட்டுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பான பள்ளி என்று விருது பெற்ற அரசு பள்ளியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் காட்சி அமைத்த இயக்குனர் ஞானவேல் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அந்த காட்சியை படத்திலிருந்து நீக்க சமூக ஆர்வலர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

News October 11, 2024

திருச்செந்தூர் – நெல்லை பயணிகள் ரயில் ரத்து

image

நெல்லை ரயில் நிலையத்தில் ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி திருச்செந்தூரில் இருந்து மாலை 4:25 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் நெல்லை முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் வருகின்ற 15 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 22 ஆம் தேதி வரை திங்கள்கிழமை மற்றும் தீபாவளி நாளை தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!