India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் <

கயத்தாறு பகுதி சன்னதுபுதுக்குடியை சேர்ந்தவர் செல்வகணேஷ் (24). இவர் கங்கை கொண்டான் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த செல்வ கணேஷ், நேற்று திடீரென வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் களைக்கொல்லி மருந்து குடித்தார். மயங்கிய இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார்.

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க..

தூத்துக்குடி மக்களே, அரசின் சார்பாக திருமண உதவி திட்டங்களில் திட்டம் 1: ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்கம். திட்டம் 2: ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. விண்ணப்பிச்சு பணம் வரலையா இங்கு <

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 அழைத்து
CHECK செய்து வாங்குங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..

தூத்துக்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கணேசன் (21). மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று திருநெல்வேலி சென்றுவிட்டு காலையில் பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வாகைகுளம் அருகே வந்தபோது முன்னால் சென்று காெண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக இவரது பைக் மோதியது. விபத்தில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். BE., B.tech ல் ஏதேனும் ஒரு பிரிவில் பயின்றவர்கள் 05.02.2026 க்குள் இந்த லிங்கை <

தூத்துக்குடி புதிய துறைமுகம் – மதுரை சாலையில் உள்ள மடத்தூர் மேம்பாலத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற சிப்காட் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கீழச்செக்காரக்குடியை சேர்ந்த சமையல் மாஸ்டர் சேரந்தையன் (52) என்பது தெரியவந்தது. விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தட்டார்மடம் அருகே உள்ள போலையார்புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரும் ஜெபாஸ்லின் விஜி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கு ஜெபாஸ்லின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து, அவரை சகோதரர்கள் தாக்கியதால், அவர் ராஜேஷ் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் வீட்டிற்கு வந்த ஜெபாஸ்லினின் சகோதரர்கள் ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சரமாரி தாக்குதலில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.தூத்துக்குடி – 9445000371
2.ஸ்ரீவைகுண்டம் – 9445000372
3.திருச்செந்லூரர் – 9445000373
4.சாத்தான்குளம் – 9445000374
5.கோவில்பட்டி – 9445000375
6.ஓட்டப்பிடாரம் – 9445000376
7.விளாத்திகுளம் – 9445000377
8.எட்டயபுரம் – 9445000378
9.கயத்தார் – 9499937033
10.ஏரல் -9499937034
Sorry, no posts matched your criteria.